தமிழக அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள் கவனத்திற்கு – அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் கொரோனா கால கட்டத்திற்கு பிறகு அரசுக்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் விதமாக அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
நிதிச்சுமை
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டது. அதனால் இதனை சரி செய்ய அரசு பல்வேறு வகையான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதில் குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் குறைக்கப்பட்டு வந்தன. இதையடுத்து தற்போது தான் அகவிலைப்படி உயர்வு, சிறப்பு தற்செயல் விடுப்பு உள்ளிட்ட சலுகைகளை வழங்கி வருகிறது. ஆனாலும் அரசின் நிதிச்சுமையை குறைக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது போக்குவரத்து ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதாவது அரசின் நிதிச்சுமையை குறைத்து வருவாய் அதிகரிக்கும் வகையில் அனைத்து அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. இந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் கடந்த சுதந்திர தினவிழாவை முன்னிட்டு அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 14வது ஊதிய பேச்சுவார்த்தையின் காரணமாக அரசுக்கு கூடுதல் வருவாய் தேவைப்படுகிறது.
Airtel பயனர்களுக்கு இலவசமாக Disney + Hotstar? சூப்பர் திட்டம் அறிமுகம்!
அதன்படி, அரசுக்கு மாதத்திற்கு 10 கோடி ரூபாய் வரை கூடுதல் நிதி தேவைப்படுகிறது. இதில் ஒவ்வொரு மாதத்திற்கும் 3.40 கோடி ரூபாயானது பேருந்துகளில் விளம்பரங்கள் வாயிலாக பெறப்படுகிறது. இதில் மீதமுள்ள 6.60 கோடி ரூபாயானது பயணிகளுக்கு வழங்கப்படும் டிக்கெட் வாயிலாக வசூலிக்கப்பட வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் பேருந்துகளில் முழுமையான அளவு பயணிகளை ஏற்றி சென்று வருவாயை அதிகரிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை அனைத்து மண்டல மேலாளர்களும் முறையாக கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்