தமிழகத்தில் இருந்து வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு – கொரோனா தடுப்பூசி!
தமிழகத்தில் இருந்து வெளிநாடு செல்பவர்களுக்கு மட்டும் உடனே இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்த பொது சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
கொரோனா தடுப்பூசி:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதனை தடுக்க அரசு பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. மேலும் தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முன்னதாக மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள ஆர்வம் காட்டாத நிலையில் செப்டம்பர் மாதங்களில் கொரோனா மூன்றாம் அலை தாக்கம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் ஆர்வத்துடன் பலர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.
தமிழக அரசின் ரேஷன் கார்டு பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
ஆனால் முதல் தவணை செலுத்தி கொண்ட பலருக்கு இரண்டாம் தவணை கிடைக்காமல் உள்ளது. இதனால் கோவிஷீல்டு முதல் டோஸ் செலுத்திய பின் இரண்டாவது டோஸ் செலுத்துவதற்கான காலம் 4 வாரத்திலிருந்து 12 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே சில வெளிநாடுகளில் அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதனால் பல வாரங்கள் காத்திருப்பதால் வெளிநாடுகள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் வெளிநாடு செல்பவர்கள் மட்டும் 28 நாட்களுக்குள் தடுப்பூசி போட்டுக் கொள்ள பொது சுகாதாரத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சென்னையில் 19 இடங்களிலும், தமிழகம் முழுவதும் 75 இடங்களிலும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.