கிறிஸ்துமஸ் தள்ளுபடி: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 48 ரூபாய் குறைந்துள்ளது. இந்த வார தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தங்க விலை:
கொரோனா தாக்கத்தால் தொழில்கள், பங்குச்சந்தை சரிவடைய தொடங்கியதில் இருந்து பெரும்பாலான மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதிலேயே ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் தங்கத்தின் மீதான முதலீடு அடுத்தடுத்து வரும் நாட்களில் பெரும் லாபத்தை அள்ளிக் கொடுப்பதாக உள்ளதால் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முதலீட்டு நிறுவனங்கள் அதிக அளவில் தங்கத்தை வாங்குவதால் அதன் விலை சாமானியர்களுக்கு கட்டுப்படி ஆகாத அளவில் உயர்ந்து வருகிறது. மறுபுறம் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளித்த பிறகு தங்கம் விலை குறைய ஆரம்பித்தது.
தமிழகம் முழுவதும் பள்ளிகள் இயங்குமா? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
இருந்தாலும் மக்களுக்கு தங்கம் விலை அதிர்ச்சி அளிக்க கூடிய வகையில் தான் இருந்து வருகிறது. தினந்தோறும் தங்கம் விலை மாறுபட்டு வருகிறது. அதன் படி காலையில் ஒரு விலை மற்றும் மாலையில் ஒரு விலை என்று தினசரி 2 முறை தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. தங்க ஆபரணங்கள் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, அதிலும் தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. இங்கு அதிக மக்கள் தங்க அணிகலன்கள் வாங்குகின்றனர்.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் – மாநில அரசு அதிரடி அறிவிப்பு!
இந்த தங்கத்தின் விலை வார தொடக்கத்தில் இருந்தே சற்று குறைந்து தான் வருகிறது. அந்த வகையில் இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 48 ரூபாய் குறைந்து ரூ.36,368-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.6 குறைந்து ரூ.4,546-க்கு விற்பனையாகிறது. அடுத்ததாக சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.66.20-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.