கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் – மாநில அரசு அதிரடி அறிவிப்பு!

0
கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் - மாநில அரசு அதிரடி அறிவிப்பு!
கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் - மாநில அரசு அதிரடி அறிவிப்பு!
கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் – மாநில அரசு அதிரடி அறிவிப்பு!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஓமைக்ரான் பாதிப்புகள் அதிகரித்து வருவதால் தடுப்பு பணியாக வரவிருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளுக்கு அம்மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கட்டுப்பாடுகள் விதிப்பு:

இந்தியாவில் கொரோனா வைரஸில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் தொற்று தீவிரமெடுத்து வருகிறது. இதுவரை நாடு முழுவதும் 236 பேருக்கு ஓமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா அச்சறுத்ததால் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் நிலையில் தற்போது ஓமைக்ரான் பரவல் மீண்டும் மக்களின் அச்சத்தை அதிகப்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் அதிக வீரியமிக்கதாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் இது மூன்றாம் அலையின் தொடக்கம் என்றும் கூறப்படுகிறது.

மீண்டும் தீவிரமடையும் கொரோனா பரவல் – மறுஉத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு!

இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் கொரோனா இரண்டு அலைகளும் கோரத்தாண்டவம் ஆடியது. அந்த வகையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் இருந்து வருகிறது. இதையடுத்து தடுப்பு பணிகள் அம்மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு படிப்படியாக கொரோனா பரவல் குறைக்கப்பட்டது. இந்த நிலையில் அம்மாநில அரசு மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கில் தளர்வுகளை அளித்து வந்தது.

TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உடனே பாருங்க!

தற்போது ஓமைக்ரான் எனும் மாறுபாடு அடைந்த வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. மகாராஷ்டிராவில் மட்டும் 88 பேர் ஓமைக்ரான் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் கிறிஸ்துமஸ், புத்தாண்டை வழிபாட்டு தலங்களுக்கு வெளியேயும், உள்ளேயும் எளிமையாக கொண்டாட வேண்டும். கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தில் பொது ஆலயங்களில் 50% பேர் மட்டுமே பங்கு பெற வேண்டும். மக்கள் அதிகம் கூடும் வகையில் பேரணி, ஊர்வலங்கள், வாணவேடிக்கை போன்ற நிகழ்ச்சிகளை நடத்த கூடாது என்று பல கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு விதித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!