சென்னை: அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 24 ரூபாய் உயர்ந்துள்ளது. கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு என அடுத்தடுத்து பண்டிகைகள் வரும் நேரத்தில் தங்கத்தின் விலை உயர்வு நகை பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்க விலை நிலவரம்:
கடந்த வருடம் முதல் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கின் விளைவாக தொழில் துறை தொடர் சரிவை சந்தித்து வந்தது. முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கினர். அதனால் கடந்த மே மாதம் முதல் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சர்வதேச சந்தை நிலவரத்தை பொறுத்து தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. எப்போதும் சுபமுகூர்த்த தினங்களும், பண்டிகை காலங்களிலும் தங்கம் விலை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் நகைப்பிரியர்கள் நகை வாங்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.
மதுரையில் நாளை (டிச.15) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின் வாரியம் அறிவிப்பு!
மற்ற நாடுகளில் தங்கம் என்பது ஒரு வகையான முதலீடு மட்டுமே. ஆனால் இந்தியாவில் தங்க நகைகள் அணிவது ஒரு கலாசார வழக்கமாக உள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலையால் திருமணத்திற்கு நகை வாங்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு இருப்பவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த மாதம் தமிழகத்தில் விஜயதசமி, தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் நகை விலை எதிர்பாராத அளவு உயர்ந்தது. ஒரு சவரன் 40,000 ரூபாயை எட்டியது. அதன் பிறகு படிப்படியாக குறைந்தது 36,000 விற்கப்பட்டது.
அரசு ஊழியர்களுக்கு ஷாக் அறிவிப்பு – ஊழல் புகார் தெரிவிக்க ஆன்லைன் சேவை அறிமுகம்!
கடந்த ஒரு வரம் தங்கம் விலை சற்று குறைந்து வந்த வந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது. இன்றய நிலவரப்படி தங்கம் ஒரு சவரனுக்கு 24 ரூபாய் உயர்ந்து ரூ.36,304 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.4,538-க்கும் விற்பனையாகிறது. தங்கத்தை தொடர்ந்து சில்லறை வர்க்கத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.65.20க்கும் விற்பனையாகிறது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு என அடுத்தடுத்து பண்டிகைகள் வரவுள்ள நேரத்தில் தங்கத்தின் விலை உயர்வு நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.