மதுரையில் நாளை (டிச.15) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின் வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மின் தடை செய்யப்படுகிறது. இதன் விளைவாக நாளை (டிச.15) புதன்கிழமை அன்று மதுரை மாவட்டத்தில் உள்ள நரசிங்கம்பட்டி, திருவாதவூர் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மின்தடை அறிவிப்பு
தமிழகத்தில் மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மின்தடை ஒவ்வொரு பகுதிகளிலும் ஏற்படுகிறது. எனில் மின் கோளாறு மற்றும் மின் கசிவு காரணமாக விபத்துகள் அதிக அளவு ஏற்படுகிறது. மேலும் மின் இணைப்பு கம்பிகளில் ஏற்படும் மின் பிளவு காரணமாகவும் பல்வேறு விபத்துகள் ஏற்படுகிறது. மழைக்காலத்தில் சாலைகளில் அநேக இடங்களில் மின் கம்பங்களும் சாய்ந்து விழுந்துள்ளன. இதனால் அதிக விபத்துகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது
அரசு ஊழியர்களுக்கு ஷாக் அறிவிப்பு – ஊழல் புகார் தெரிவிக்க ஆன்லைன் சேவை அறிமுகம்!
அதில் குறிப்பாக மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகளை அரசு முறையாக மேற்கொண்டு வருகிறது. இதனை அரசு முறையாக அறிவித்து பின் செயல்படுத்துகிறது. அதனை தொடர்ந்து நாளை (டிச.15) புதன்கிழமை அன்று மதுரை மாவட்டத்தில் உள்ள நரசிங்கம்பட்டி, திருவாதவூர், அ. வல்லாளபட்டி மற்றும் மேலவளவு துணை மின்நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் மின் பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மின் விநியோகிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – கரும்பு விவசாயிகள் முக்கிய கோரிக்கை!
அத்துடன் இந்த துணை மின்நிலையங்களில் மின் விநியோகம் பெறும் பகுதிகளான நரசிங்கம்பட்டி, திருவாதவூா், அ. வல்லாலபட்டி, மேலவளவு, சென்னகரம்பட்டி, எட்டிமங்கலம், பட்டூா், ஆலம்பட்டி, கேசம்பட்டி, அரிட்டாபட்டி, திருவாதவூா், ஆமூா், அ. வல்லாளபட்டி, தா்மதானப்பட்டி, கொட்டகுடி சுற்றுவட்டார கிராமங்கள் மற்றும் அதனை சுற்றிள்ள பகுதிகளில் புதன்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மதுரை கிழக்கு மின் பகிா்மான வட்ட செயற்பொறியாளா் தெரிவித்துள்ளார்.