தமிழக மின்சார வாரியத்தின் கடன் ரூ.1. 34 லட்சம் கோடி – அரசு அறிவிப்பு!
தமிழக மின்சார வாரியத்தின் கடன் தொகையானது கடந்த மார்ச் மாத நிலவரப்படி ரூ.1,34,119.94 கோடியாக உள்ளது என்று அரசின் எரிசக்தித் துறை அறிவித்துள்ளது.
கடன் தொகை:
தமிழகத்தின் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் முதன்முறையாக கடந்த 13ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த முறை பட்ஜெட் தாக்கலின் போது பல புதுமைகள் செய்யப்பட்டது. பேப்பர் வடிவில் அல்லாமல் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் இருக்கையிலும் ஒரு டிஜிட்டல் மானிட்டர் பொருத்தப்பட்டது. இதன் மூலமாகவே தமிழகத்தில் அடுத்து அறிவிக்க திட்டங்களும் நவீனமாக என்பது உறுதியாகியது. அந்த வகையில், தொடர்ந்து சட்டப்பேரவையில் நடந்து வந்த மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்து வந்தது.
தமிழகத்தில் பள்ளிகளில் நேரடி வகுப்புகளுக்கு தடை? உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி!
மானிய கோரிக்கை விவாதத்தில் தமிழகத்தின் அனைத்து துறை அமைச்சர்களும் தங்களது துறை சார்ந்த புதிய திட்டங்களையும், மாற்றங்களையும் அறிவித்து வந்தனர். இந்த அறிவிப்புகள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில், இன்று தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறை கொள்கை விளக்கம் அளிக்கப்பட்டது. அதில் உதய் திட்டத்தில் தமிழக அரசு 22815 கோடி கடனை ஏற்றுக்கொண்டாலும், மின்சார வாரியத்தின் கடன் 31.03.2021 வரை ரூ.1,34,119.94 கோடியாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா மூன்றாம் அலை தொடங்கி விட்டது – அமைச்சர் தகவல்!
மேலும், 31.03.2021 வரை தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் கடன் 25,568.73 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் கடந்த 10 ஆண்டுகளில் 7 வருடங்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளது. இதன் காரணமாக 31.03.2021 வரை இழப்புகள் 6,782.35 கோடியாக அதிகரித்துள்ளதாவும், நடப்பு நிதியாண்டில் வருவாய் இழப்புகள் 1,778.17 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசின் எரிசக்தி துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.