கொரோனா மூன்றாம் அலை தொடங்கி விட்டது – அமைச்சர் தகவல்!
இந்தியாவில் மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நாள்தோறும் கொரோனா பாதிப்புகள் இரண்டு மடங்கு அதிகரித்து வருகிறது. இதனால் மூன்றாம் அலை தாக்க தொடங்கியுள்ளதாக அம்மாநில அமைச்சர் நிதின் ரௌத் அறிவித்துள்ளார்.
மூன்றாம் அலை:
மஹாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த வருடம் முதல் கொரோனா பரவல் தீவிரமெடுத்து வருகிறது. கடந்த வருடம் மஹாராஷ்டிரா மாநிலம் கொரோனா மையமாகவே மாறியது. நாட்டில் அதிகளவு கொரோனா பாதிப்புகள் மஹாராஷ்டிராவில் தான் பதிவானது. அம்மாநிலத்தின் மும்பை மாநகரம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் முதலிடத்தில் இருந்தது. இதனை கட்டுப்படுத்த அம்மாநில அரசு நோய் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தியது. அதனை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்து மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது.
NEET UG 2021 – அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கான கட் ஆப் விவரங்கள்!
அதனால் தற்போது வரை மகாராஷ்டிராவில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. இந்த நிலையில் மகாராஷ்டிரத்தின் நாக்பூர் பகுதியில் கொரோனா மூன்றாவது அலை தாக்க தொடங்கி விட்டது என்று அமைச்சர் நிதின் ரௌத் தெரிவித்துள்ளார். நாக்பூரில் கொரோனா பாதிப்புகள் சில வாரங்களாக இரண்டு மடங்காக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 14 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தடுப்பு பணியாக மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது.
உருளை கிழங்கை சுவைக்க ரூ.50,000 மாத சம்பளம் – இங்கிலாந்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!
மேலும் அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு, குழந்தைகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தான் நாக்பூரில் கொரோனா மூன்றாம் அலை தொடங்கி விட்டதாக அமைச்சர் அறிவித்துள்ளார். மேலும் நாக்பூரில் தத்தா மேகே மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு பயிலும் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.