உருளை கிழங்கை சுவைக்க ரூ.50,000 மாத சம்பளம் – இங்கிலாந்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!
இங்கிலாந்தில் உள்ள ஒரு உணவகத்தில் உணவுகளை சுவைத்து ருசியினை சரியாக சொல்பவர்களுக்கு மாதம் ரூ.50,000 ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வேலைவாய்ப்பு
கொரோனா தொற்று காலத்தில் உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான மக்களின் வேலைவாய்ப்புகள் பறிபோனது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டதால் வேலை இழக்கும் சம்பவங்கள் நிகழ்ந்தது. இதனால் பலர் பொருளாதாரத்தில் சரிவடைய தொடங்கியிருந்தனர். எனவே கிடைக்கும் எந்த வேலையினை செய்வதற்கு பலரும் தயாராக உள்ளனர். தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்து பழையபடி வணிகம் தொடங்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – தமிழகத்தில் ஆன்லைன் மூலம் மதுபான விற்பனை?
இந்நிலையில், ஒரு புது விதமான வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எளிதான ஆனால் கை நிறைய சம்பாதிக்கும் வாய்ப்பினை பெற பலரும் ஆவலாக உள்ளனர். அதாவது, இங்கிலாந்தில் உள்ள பொட்டனிஸ்ட் என்ற உணவகம் உருளைக்கிழங்கு மற்றும் இறைச்சியை சுவைத்து சரியான சுவையை சொல்வதற்கு 500 யூரோ சம்பளமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்திய மதிப்பில் ரூ.50,000 ஆகும். இந்த பணியின் பெயரை Pro-Tato-Tater (புரோ-டாட்டோ-டேட்டர்) என்று அழைக்கின்றனர்.
இந்த ஸ்மார்ட்போன்களில் WhatsApp சேவைகள் நிறுத்தம் – பயனர்கள் அதிர்ச்சி!
இந்த வேலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் வறுத்த உருளைக்கிழங்கை சாப்பிட வேண்டும். மேலும், மாட்டிறைச்சி, கோழி, ஆட்டு இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி உள்ளிட்ட நான்கு வகையான இறைச்சியை ருசிக்க வேண்டும். இவர்களின் ஒப்புதலுக்கு பிறகு தான் இந்த பொருட்கள் விற்கப்படும். உருளைக்கிழங்கை மிகவும் ருசித்து உண்பவர்களுக்கு இது நல்ல வாய்ப்பாக அமைய உள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பணிக்காக செப்டம்பர் 19 அன்று நேர்முகத்தேர்வை நடத்த உள்ளனர். இதற்காக விண்ணப்பதாரர் உருளைக்கிழங்கின் சுவை பற்றி 60 வினாடிகள் வீடியோ எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.