தமிழகத்தில் பள்ளிகளில் நேரடி வகுப்புகளுக்கு தடை? உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி!
தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ – மாணவிகளுக்கு கொரோனா பரவல் உறுதியாகி வருகிறது என கூறி பள்ளிகளில் நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனு ஒத்திவைக்கப்பட்டது.
பள்ளிகள் திறப்பு:
கொரோனா தாக்கத்தின் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தேர்வுகளும் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வந்தது. ஆன்லைன் வகுப்புகள் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு திருப்தி அளிக்காத காரணத்தால் பள்ளிகளை திறக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை முன்வைத்தனர்.
கொரோனா மூன்றாம் அலை தொடங்கி விட்டது – அமைச்சர் தகவல்!
அதனை தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வந்த நிலையில் பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. செப்டம்பர் 1ம் தேதி முதல் சுழற்சி முறையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வரும் காரணத்தால், தமிழகம் முழுவதும் பள்ளிகளில் நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என அப்துல் வகாப் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
NEET UG 2021 – அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கான கட் ஆப் விவரங்கள்!
மனுவை விசாரித்த நீதிபதி முன்னிலையில் பள்ளிக்கு மாணவர்கள் நேரடியாக வருமாறு தமிழக அரசு கட்டாயப்படுத்தவில்லை. மாணவர்களை கட்டாயப்படுத்த படவும் மாட்டார்கள் எனவும் தமிழகம் முழுவதும் 6 முதல் 7 பள்ளி மாணவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. அதே சமயத்தில் தொற்று பரவலின் தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அரசின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கினை செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.