தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – அமைச்சர் சூப்பர் அறிவிப்பு!
கூட்டுறவு வங்கிகளில் பொதுமக்கள் பெற்ற நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி தற்போது நகைக்கடன் பெற்ற மக்களுக்கு கடன் தள்ளுபடி என்று கூட்டுறவு அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
நகைக்கடன் தள்ளுபடி:
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த திட்டங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். அதைபோல் சட்டப்பேரவையில் 110வது விதியின் கீழ் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை வரை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும் மக்கள் நன்மை பெரும் வகையில் 6 ஆயிரம் கோடி நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவித்திருந்தார். இதற்கான அரசாணை எப்போது வெளியாகும் என தமிழக மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு 31% அகவிலைப்படி (DA) உயர்வுடன் பொங்கல் போனஸ் – முதல்வர் அறிவிப்பு!
2021 மார்ச் 31 ஆம் தேதி வரை அடகு வைத்தவர்களுக்கு மட்டும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும். மேலும், ஒரே குடும்பத்தில் அதிக நபர்கள் நகைகளை அடகு வைத்திருந்தால் தள்ளுபடி செய்யப்படாது என்று அறிக்கை வெளியிடப்பட்ட நிலையில் தற்போது அந்த அறிக்கை நிறைவேற்றப்பட உள்ளது. அதற்கான பணிகளும் முடிந்து விட்டது என தி.மு.க அரசு தெரிவித்துள்ளது. கூட்டுறவு வங்கிகளில் நகைகளை திரும்ப பெறுவதற்கான பட்டியல் தயாராகி விட்டதாக திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் இ.பெரியசாமி கூறினார்.
தமிழகத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு விநியோகம் – முக்கிய அறிவிப்பு!
மேலும் 2022 ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகைக்கு முன்பு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு நகைகள் திரும்ப கொடுக்கப்படும் என்று தெரிவித்தார். மணல் பெறுவதற்கு ஆன்லைனில் பதிவு செய்து அரசு பரிசீலனை செய்கிறது. அதனால் கட்டுமான பணிக்கு தட்டுப்பாடு இல்லாத மணல் கிடைக்கும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி கூறினார். இவ்வாறு தி.மு.க அரசு நகைக்கடன் தள்ளுபடி பற்றி அறிவிக்கப்பட்டதை நிறைவேற்றியதால் கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் வைத்திருந்த மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.