தமிழகத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு விநியோகம் – முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு விநியோகம் - முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு விநியோகம் - முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு விநியோகம் – முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட பொங்கல் பரிசுத்தொகுப்பை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. இது குறித்த மேலும் சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

பொங்கல் பரிசுத்தொகுப்பு:

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட பொங்கல் பரிசு தொகுப்பை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரசு வழங்கி வருகிறது. அத்துடன் தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள் போன்ற அனைவருக்கும் இந்த பரிசுப்பொருள் தொகுப்பு வழங்க வேண்டும் என்றும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த ஆண்டில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பை வழங்க உள்ளதாக திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளை வருகிற ஜனவரி 3ம் தேதி துவங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

Wipro நிறுவனத்தில் ரூ. 3.5 லட்சம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்நிலையில் வருகிற ஜனவரி 7ம் தேதி அனைத்து ரேஷன் கடைகளுக்கு விடுமுறை தினமாக உள்ளது. மேலும் பொங்கல் தினத்துக்குள் பொங்கல் பரிசு தொகுப்பை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டும். இதற்கு குறைந்த நாட்களே உள்ளதால் வருகிற ஜனவரி 7ம் தேதி அனைத்து ரேஷன் கடைகளும் திறக்கப்பட வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து இந்த விடுமுறை நாளுக்கு பதிலாக ஜனவரி 15 ஆம் தேதி விடுமுறை நாளாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டதை அந்தந்த மாவட்ட ஆட்சியர் கண்காணிக்க வேண்டும்.

மறுஅறிவிப்பு வரும் வரை பள்ளிகளை மூட உத்தரவு – முதல்வர் ஆணை! ஓமிக்ரான் அச்சம் எதிரொலி!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களும் பொங்கல் பரிசுத்தொகுப்பை பெற்றிருக்க வேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது. அத்துடன் நாள் ஒன்றுக்கு சுழற்சி முறையில் 150 முதல் 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க வேண்டும். இந்நிலையில் 750 குடும்ப அட்டைதாரர்களுக்கு மேல் உள்ள ரேஷன் முறையாக டோக்கன் வழங்கி பொங்கல் தினத்திற்குள் பரிசு தொகுப்பை வழங்க வேண்டும். மேலும் குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் இந்த பரிசு தொகுப்பை பெற்று கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!