மறுஅறிவிப்பு வரும் வரை பள்ளிகளை மூட உத்தரவு – முதல்வர் ஆணை! ஓமிக்ரான் அச்சம் எதிரொலி!

0
மறுஅறிவிப்பு வரும் வரை பள்ளிகளை மூட உத்தரவு - முதல்வர் ஆணை! ஓமிக்ரான் அச்சம் எதிரொலி!
மறுஅறிவிப்பு வரும் வரை பள்ளிகளை மூட உத்தரவு - முதல்வர் ஆணை! ஓமிக்ரான் அச்சம் எதிரொலி!
மறுஅறிவிப்பு வரும் வரை பள்ளிகளை மூட உத்தரவு – முதல்வர் ஆணை! ஓமிக்ரான் அச்சம் எதிரொலி!

டெல்லியில் அதிகரித்து வரும் ஓமிக்ரான் பரவல் காரணமாக மீண்டும் பள்ளிகளை மூட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும் டெல்லியில் நோய் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் மூடல்:

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையிலிருந்தே மக்கள் மீண்டு வர முடியாத நிலையில் உள்ளனர். அடுத்த தாக்குதலாக கொரோனா வைரஸ் தொற்று தீவிரமெடுத்து பரவி வருகிறது. அந்த வகையில் டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களில் அடுத்தடுத்து ஓமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. இதுவரை இந்தியாவில் 500க்கும் மேற்பட்டோர்க்கு ஓமைக்ரான் பாதிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசிகள் செலுத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கும் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் யார் யாருக்கு பொங்கல் பரிசு 2022 கிடைக்கும்? அரசு விளக்கம்!

இன்னும் ஓரிரு தினங்களில் புத்தாண்டு வர உள்ள நிலையில் மக்கள் கொண்டாட்டங்களுக்காக ஒன்று கூடுவர். இதனால் தொற்று அதிகரிக்க வாய்ப்பிருப்பதால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மாநில அரசுகள் தடை விதித்துள்ளனர். மேலும் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். வெகு நாட்களுக்கு பிறகு தற்போது தான் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. திருப்புதல் மற்றும் பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் தயாராகி வரும் வேளையில் பரவி வரும் ஓமிக்ரான் தொற்று மீண்டும் பள்ளிகளை மூட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

அமலுக்கு வரும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் – உணவகங்கள், அலுவலகங்கள் 50% திறனுடன் இயக்கம்!

தற்போது டெல்லியில் ஓமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக மீண்டும் பள்ளிகளை மூட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே காற்று மாசுபாடு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் மீண்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லியில் ஓமிக்ரான் தடுப்பு நடவடிக்கையாக பேருந்து மற்றும் மெட்ரோ ரயில்களில் 50% பயணிகளுக்கு மட்டுமே திருமணம், மரணம் தொடர்பான நிகழ்ச்சிகளில் 20 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!