தமிழகத்தில் யார் யாருக்கு பொங்கல் பரிசு 2022 கிடைக்கும்? அரசு விளக்கம்!
தமிழகத்தில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கவும், சிரமம் இன்றி கூட்ட நெரிசலை தவிர்க்கவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை தமிழக அரசு அனுப்பியுள்ளது.
பொங்கல் பரிசுத்தொகுப்பு:
தமிழகத்தில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசால் வழங்கப்பட உள்ள பொங்கல் பரிசு தொகுப்பு வரும் ஜனவரி 3ம் தேதி ரேஷன் கடைகள் மூலம் அரிசி கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த பரிசுத்தொகுப்பில் பச்சரிசி ஒரு கிலோ, வெல்லம் ஒரு கிலோ, முந்திரி, ஏலக்காய் 10 கிராம், திராட்சை தலா 50 கிராம் , பாசி பருப்பு அரை கிலோ, ரவை ஒரு கிலோ, மல்லி தூள், நெய், கடுகு, சீரகம் 100 கிராம், மிளகு 50 கிராம், புளி 200 கிராம், உளுத்தம் பருப்பு அரை கிலோ, கடலை பருப்பு 250 கிராம், கோதுமை ஒரு கிலோ, புளி 250 கிராம், உப்பு ஒரு கிலோ ஆகிய 21 வகையான பொருட்கள் துணி பையில் போட்டு பாதுகாப்பாக மக்களுக்கு வழங்கப்பட உள்ளன.
அமலுக்கு வரும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் – உணவகங்கள், அலுவலகங்கள் 50% திறனுடன் இயக்கம்!
பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்திற்கான ஏற்பாடுகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. அந்த அறிக்கையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நாட்களில் ரேஷன் கடைகள் உரிய நேரத்தில் திறக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த வகையில் அனைத்து அரிசி கார்டுதாரர்களுக்கு விடுதல் இன்றி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5,000 பொங்கல் பரிசுத்தொகை – அரசுக்கு கோரிக்கை!
பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க வரிசையில் காத்திருக்கும் குடும்ப அட்டைதாரர்கள் யாரையும் பரிசு பொருட்கள் முடிந்து விட்டது என கூறி அனுப்ப கூடாது. இந்தியாவில் பிற மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்திலும் ஓமைக்ரான் பரவல் அதிகம் உள்ளதால் பேரிடர் மேலாண்மை துறை வெளியிடும். கொரோனா தடுப்பு விதிமுறைகளை பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க வரும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் ரேஷன் கடை பணியாளர்களும் பின்பற்றுவதை அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் உறுதி செய்ய வேண்டும் என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.