தமிழகத்தில் ஆன்லைனில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படுமா என்பது குறித்த கேள்விக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் விளக்கமளித்துள்ளார்.
பிளஸ் 2 தேர்வு:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தற்போது பரவும் கொரோனாவின் இரண்டாவது அலையின் தீவிரம் காரணமாக 2020-21ம் ஆண்டிற்கான 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. மேலும் அந்த வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
ஆனால் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படாத நிலையில் தேதி அறிவிக்காமல் ஒத்திவைக்கப்பட்டது. மேலும் பிளஸ் 2 மாணாக்கர்களுக்கான செய்முறை தேர்வுகள் கொரோனா பரவலுக்கு மத்தியில் தக்க பாதுகாப்புடன் நடைபெற்றது. தற்போது இதனை தொடர்ந்து பிளஸ் 2 மாணாக்கர்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எப்போது நடைபெறும் என்று பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு நீட்டிப்பு? அமைச்சர் விளக்கம்!
மேலும் அவர்களுக்கான பொதுத்தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படுமா என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றது. தற்போது பெற்றோர்களின் குழப்பங்கள் தீரும் வகையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி அவர்கள் விளக்கமளித்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடைபெறாது என்று தெரிவித்தார். மேலும் அவர்களுக்கு கட்டாயமாக நேரடி முறையில் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று கூறிய அமைச்சர், மாநில அரசே 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியை முடிவு செய்யும். மேலும் வழக்கம் போல் 3 மணி நேரம் பள்ளிகளில் தேர்வு நடத்த வேண்டும் என கூறியுள்ளார்.