தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பாடத்திட்டத்தை குறைக்க கோரிக்கை!
தமிழகத்தில் 10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிவிட்ட நிலையில் பாடத்திட்டத்தை நடத்தி முடிப்பற்கு சிரமமான சூழ்நிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பாடப் பகுதிகள் குறித்து ஆசிரியர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.
பாடத்திட்டம்:
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பொதுத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்க உள்ளது. அதனை தொடர்ந்து 12ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு மே 5ம் தேதி முதல் தேர்வு தொடங்கவுள்ளது. மேலும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மே 6 ஆம் தேதி தொடங்கி மே 30ஆம் தேதி வரையும் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.’
Airtel vs VI vs Jio நிறுவன வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – 30 நாட்கள் வேலிடிட்டி ரீசார்ஜ் திட்டங்கள்!
அதனை தொடர்ந்து 1 -5 ம் வரையிலான மாணவர்களுக்கு மே 13ம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது. வெகு நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு பாட சுமையை குறைக்க 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது. முன்னுரிமை பாடப் பகுதியே நடப்பாண்டு தேர்வுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது முன்னுரிமை பாடத்திட்டத்தை நடத்தி முடிப்பதற்க்கே சிரமமான சூழ்நிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. பாடத்திட்ட அளவை மேலும் குறைக்க ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கல்வித்துறை அமைச்சர், நடத்தப்படாத பாடங்களில் இருந்து தேர்வுக்கு வினாக்கள் கேட்கப்படாது என கூறியுள்ளார். இது ஆசிரியர் மாணவர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விளக்கம் அளிக்கவும், மாணவர்களின் கருத்தை பரிசீலனை செய்து காலம் தாழ்த்தாமல் தேர்வுத்துறை அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.