TN TRB வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – பாடத்திட்டம் குறித்த முழு விபரங்கள் இதோ!
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்வுக்கான தேதி விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
டெட்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்து வந்த நிலையில் அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் பள்ளிகளை திறக்க அரசு அனுமதி அளித்தது. கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் அரசின் முயற்சியால் நடப்பு ஆண்டில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்தது. அதனால் ஆசிரியர் பற்றாக்குறை நிலவியது. இதனையடுத்து கடந்த வருடம் அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள 2,207 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப கோரிக்கைகள் எழுந்தது. கடந்த பிப்ரவரி மாதம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு நடைபெற்றது.
PF பென்ஷன் தொகை உயர்வு? விரைவில் வெளியாகும் அறிவிப்பு!
அதன் தொடர்ச்சியாக நடப்பு ஆண்டு இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பபதிவு கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. முதல் தாள் எழுதுவதற்கு D.T.Ed கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் 12 ஆம் வகுப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரண்டாம் தாள் எழுத விண்ணப்பிப்பவர்கள் B.Ed கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. விண்ணப்பபதிவுகள் முடிவடைந்து தேர்வை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் வேளையில் பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதில் குழந்தை வளர்ச்சி கற்பித்தல் – 30 மொழிப்பாடம் – 30, கணிதம் -30, சுற்றுச்சூழல் கல்வி – 30, ஆங்கிலம் – 30 என மொத்தம் 150 கேள்விகள் இடம்பெறும் என்றும் தேர்வானது 3 மணி நேரத்திற்கு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பாடத்திட்டமானது http://www.trb.tn.nic.in என்றற இணையதளத்தில் வெளியிட்டபட்டுள்ளது. மேலும் ஜூன் 17 ஆம் தேதியும், இரண்டாம் தாள் ஜூன் 28 ஆம் தேதியும் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.