PF பென்ஷன் தொகை உயர்வு? விரைவில் வெளியாகும் அறிவிப்பு!

0
PF பென்ஷன் தொகை உயர்வு? விரைவில் வெளியாகும் அறிவிப்பு!
PF பென்ஷன் தொகை உயர்வு? விரைவில் வெளியாகும் அறிவிப்பு!
PF பென்ஷன் தொகை உயர்வு? விரைவில் வெளியாகும் அறிவிப்பு!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஊழியர்களின் பென்சன் பெறுவதற்கான சம்பள வரம்பை 21,000 ரூபாயாக உயர்த்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதை உயர்த்துவது குறித்த ஆலோசனையில் பிஎஃப் அமைப்பு ஈடுபட்டுள்ள நிலையில், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பென்ஷன் தொகை உயர்வு:

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் முக்கிய நோக்கம், ஒருவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றாலோ அல்லது வேறு பணிக்கு மாறுதலாகி சென்றாலோ அவரது தொழிலாளர் வைப்பு நிதியில் சேகரிக்கப்பட்ட நிதியை பெறுவது என்பது ஆகும். இது ஒரு நீண்ட கால சேமிப்பு திட்டமாகும். ஊழியர்களின் முதல் பென்ஷன் சம்பள வரம்பு 6,500 ரூபாயாக இருந்தது. இந்த பென்ஷன் சம்பள வரம்பு , 2014 செப்டம்பர் மாதத்தில் 15,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதன் அடிப்படையில் தற்போது வரை ஊழியர்களின் பென்ஷன் பெறுவதற்கான சம்பள வரம்பு 15,000 ரூபாயாக உள்ளது.

TN TET தகுதித்தேர்வு இப்பள்ளிகளுக்கு பொருந்தாது – உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

இந்நிலையில் ஊழியர்களின் பென்ஷன் பெறுவதற்கான சம்பள வரம்பு 21,000 ரூபாயாக உயர்த்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதை உயர்த்துவது குறித்த ஆலோசனையில் பிஎஃப் அமைப்பு ஈடுபட்டுள்ளது. இந்த கோரிக்கை அமலுக்கு வந்தால், ஏராளமான ஊழியர்கள் இந்த அமைப்புக்குள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த நடவடிக்கையால் அரசுக்கு ரூ.6,750 கோடி கூடுதலாகச் செலவாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மட்டுமல்லாமல் EPF உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச பென்ஷன் தொகையான 1000 ரூபாயை உயர்த்தி வழங்க வேண்டும் என நீண்ட காலமாகவே கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

இது குறித்து அரசு விரைவில் நல்ல முடிவு எடுக்கும் என உறுப்பினர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர் . இதை தொடர்ந்து ஊழியர்களுக்கான பணிபுரியும் வயது வரம்பை உயர்த்துவது குறித்தும் மத்திய அரசுக்கு பொருளாதார ஆலோசனைக் குழு பரிந்துரை செய்துள்ளது. மேலும் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதுடன், யுனிவர்சல் பென்ஷன் சிஸ்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு பொருளாதார ஆலோசனைக் குழு முன்மொழிந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பென்சன் வாங்குவதற்கான சம்பள வரம்பை உயர்த்துவது குறித்து மத்திய அரசு ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!