கொரோனாவை தொடர்ந்து 7 பேருக்கு பன்றி காய்ச்சல் – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!
புதுவையில் கொரோனா வைரஸ் தொற்றை தொடர்ந்து தற்போது காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்புளுயன்சா காய்ச்சல் பாதிக்கப்பட்ட சிலருக்கு தற்போது பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் புதுவை மக்களை அச்சத்தில் உறைந்துள்ளனர்.
பன்றிக்காய்ச்சல்:
தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாகவே மக்களுக்கு அதிகம் காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இது இன்புளுயன்சா காய்ச்சல் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக குழந்தைகள் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சளி, காய்ச்சல், இருமல், உடல் வலி போன்றவைகள் இந்த காய்ச்சலுக்கான அறிகுறிகள் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதனால் இத்தகைய அறிகுறியுடையவர்கள் உடையவர்கள் மருத்துவமனைக்கு செல்லுமாறும் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பு பணி தீவிரம் – இன்றும் நாளையும் சிறப்பு முகாம்!
இந்த காய்ச்சல் ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதில் பரவுகிறது. அதனால் நோய் அறிகுறியுடையவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்வது சிறந்தது. தமிழகத்தை போலவே புதுவையிலும் இன்புளுயன்சா காய்ச்சல் தீவிரமெடுத்து பரவி வருகிறது. கடந்த ஒரு வாரமாக பள்ளி செல்லும் குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரி காரைக்காலில் குழந்தைகளின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
Exams Daily Mobile App Downloadhttps://www.youtube.com/watch?v=vTYDk2UXwXo
இந்த நிலையில் இன்புளுயன்சா காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட 10 பேரில் 7 பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 2 பேர் ஜிப்மர் மருத்துவமனையிலும், 5 பேர் பிற தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதானல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தி வருகிறது. தற்போது தொடர்ந்து பரவி வரும் காய்ச்சல்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்