இந்தியாவில் பரவும் குரங்கு அம்மை – விமான நிலையங்களில் கண்காணிப்பு பணி தீவிரம்!
இந்தியாவில் குரங்கு அம்மை பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது கேரளா, டெல்லி விமான நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
குரங்கு அம்மை:
கொரோனா வைரஸை தொடர்ந்து தற்போது குரங்கு அம்மை வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சின்னம்மை, பெரியம்மை நோய் போல இந்த குரங்கு அம்மை குரங்குகளிடம் இருந்து பரவுவதாக கூறப்படுகிறது. முதலில் ஆப்பிரிக்கா நாடுகளில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் தற்போது , அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஐரோப்பா நாடுகளிலும் பரவி வருகிறது. மேலும் காய்ச்சல், தோலில் சிறு கொப்புளங்கள் நிணநீர் கணுக்கள் வீக்கம், தலைவலி, தசை பிடிப்பு, உடல் சோர்வு,தொண்டை புண் போன்றவை குரங்கு அம்மை பாதிப்புக்கான பொதுவான அறிகுறிகள் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Exams Daily Mobile App Download
மற்ற நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் குரங்கு அம்மை வைரஸ் பரவத் தொடங்கி உள்ளது. ஐக்கிய அரபு நாட்டில் இருந்து இந்தியா வந்த 35 வயதுள்ள நபர் ஒருவருக்கு முதலில் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு மீண்டும் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கேரளாவை தொடர்ந்து தற்போது ஐதராபாத் மற்றும் டெல்லியிலும் குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிக்கு வராத மாணவர்களுக்கான ‘செக்’ – கல்வித்துறை புதிய நடவடிக்கை!
இதனால் சுகாதாரத்துறையினர் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது கேரளா மற்றும் டெல்லியில் உள்ள விமான நிலையங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அத்துடன் கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் டெல்லியில் உள்ள லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் குரங்கு அம்மை நோய்க்கான தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில் அறிகுறி உள்ளவர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.