வேடர்கள் அணியில் தொடர்ந்து சலசலப்பை ஏற்படுத்தும் பார்வதி – “சர்வைவர்” ப்ரோமோ!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் “சர்வைவர்” நிகழ்ச்சியில் 8வது நாளான இன்று வேடர்கள் இடையே நடைபெறும் வாக்குவாதம் குறித்து ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.
சர்வைவர்:
தமிழ் சின்னத்திரையில் சர்வதேச நிகழ்ச்சிகள் தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வரிசையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சர்வைவர் நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுன் கலந்து கொண்டுள்ளார். போட்டியாளர்கள் இரு அணிகளாக காடர்கள், வேடர்கள் என பிரிக்கப்பட்டுள்ளனர்.
விஜய் டிவி “சூப்பர் சிங்கர் 8” நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று – அடுத்த வாரம் நேரலையில்!
மேலும் அவர்களுக்கு நடுவே போட்டி நடைபெறுகிறது. மிகவும் கடுமையான போட்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. முதல் வாரத்தில் ஒருவர் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் காடர்கள் நடுவே ஒற்றுமையாக இருக்கின்றனர். ஆனால் வேடர்கள் நடுவே பார்வதி அடிக்கடி வாக்குவாதம் செய்கிறார். தற்போது இன்றைய எபிசோட் குறித்த ப்ரோமோ வெளியான நிலையில், அதில் பார்வதி மீண்டும் சக போட்டியாளர்களிடம் வாக்குவாதம் செய்கிறார்.
14 வாரங்களுக்கு ரூ.350 கோடி சம்பளம் – ‘பிக் பாஸ்’ சீசன் 15 சல்மான் கானுக்கு ஜாக்பாட்!
அப்போது ஐஸ்வர்யா ஏதாவது சொன்னால் நகைச்சுவையாக எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் நான் பேசினால் தப்பாக இருக்கிறது ஏன் என கேள்வி கேட்கிறார். தொடர்ந்து வேடர்கள் அணியில் பார்வதியால் சர்ச்சைகள் எழுந்து வருகிறது. இதனால் பார்வதி பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல தகுதியானவர் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். பார்வதி மட்டும் இல்லையென்றால் வேடர்கள் அணி நிம்மதியாக இருக்கும் என கமெண்டில் குறிப்பிட்டுள்ளனர்.