விஜய் டிவி “சூப்பர் சிங்கர் 8” நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று – அடுத்த வாரம் நேரலையில்!
விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் 8வது சீசன் தற்போது நடைபெற்று வரும் நிலையில், அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை இறுதி சுற்று நேரலையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி:
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு என்று தமிழ் சின்னத்திரையில் பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. ஒவ்வொரு சீசனிலும் பங்கேற்கும் போட்டியாளர்கள் ஆரம்பத்தில் யாரென்றே தெரியாதவர்களாக இருந்தாலும் சீசன் முடிந்து அவர்கள் வெளியில் செல்லும்போது பெரிய ரசிகர் கூட்டத்துடன் தான் செல்கின்றனர். ஏற்கனவே 7 சீசன் முடிந்த நிலையில் தற்போது 8வது சீசன் கொரோனா ஊரடங்கில் நிறுத்தப்பட்டாலும் மீண்டும் தொடங்கப்பட்டு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
14 வாரங்களுக்கு ரூ.350 கோடி சம்பளம் – ‘பிக் பாஸ்’ சீசன் 5 சல்மான் கானுக்கு ஜாக்பாட்!
இந்நிலையில் 8வது சீசனில் ஏற்கனவே முத்து சிற்பி, அணு, பரத், அபிலாஷ் ஆகியோர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று விட்டனர். இந்நிலையில் கடந்த வாரம் வைல்டு கார்டு சுற்று நடைபெற்றது. அதில் இரண்டு போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியின் இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அவர்கள் ஸ்ரீதர் சேனா மற்றும் மானசியும்.
SIIMA 7 விருதுகளை வென்ற சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் – ரசிகர்கள் வாழ்த்து!
இந்நிலையில் இவர்களில் அந்த பிரம்மாண்ட டைட்டிலை பெறுவது யார் என்பது அடுத்த வாரம் தான் தெரிய வரும். அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 26ம் தேதி மதியம் 3 மணிக்கு இந்நிகழ்ச்சியின் Live தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஆறரை மணி நேரம் தொடர்ந்து நிகழ்ச்சி நடைபெற இருக்கிறதாம். இந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் அடுத்த வாரம் பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் 5வது சீசன் அக்டோபர் 3ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.