சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியாது !

0
நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியாது
நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியாது

சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியாது !

நீட் தேர்வினால் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதிக்கப்படவில்லை எனவும், சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

வரும் கல்வியாண்டிற்கான காலெண்டரை UGC நாளை வெளியிடுகிறது

நீட் தேர்வு சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவன உரிமைகளை பறிக்கும் வகையில் இருப்பதாக வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரி உட்பட பல்வேறு சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

முதன்முதலாக புயலுக்குத் தமிழ்ப் பெயா் – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பளித்தது. நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளதாவது:

  • நாட்டின் நலனை முன்னிட்டு கொண்டு வரப்படும் தேர்வுக்கு பெரும்பான்மை, சிறுபான்மை என பார்க்க முடியாது.
  • அதுபோலவே சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் தனியாக தேர்வு நடத்தும் பரிந்துரையையும் ஏற்க முடியாது.
  • அரசு உதவி பெறாத மற்றும் அரசு உதவி பெறும் சிறுபான்மையின கல்வி நிறுவனங்களின் உரிமைகளை பறிக்கும் வகையிலும் நீட் சட்டம் இல்லை.
  • இதனால் இது தொடர்பான அனைத்து மனுக்களும் முடித்து வைக்கப்படுகிறது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!