விஜய் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல் – ரசிகர்கள் உற்சாகம்!
ரசிகர்களின் பேராதரவுடன் விஜய் டிவியில் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பான ‘சின்னத்தம்பி’ சீரியலை மறுஒளிபரப்பு செய்ய விஜய் டிவி சேனல் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டிவி சீரியல்
அந்தந்த காலகட்டத்துக்கு ஏற்றபடி மக்களின் ரசனையை அறிந்து புதிய நிகழ்ச்சிகள், சீரியல்களை களமிறக்கும் விஜய் டிவிக்கு ரசிகர்களின் மனங்களில் எப்போதும் தனி இடம் உண்டு. வழக்கமாக சீரியல்கள் அனைத்தும் அழுகை, சோகம், பழிவாங்குதல் என ஒரே போக்கில் பயணித்து கொண்டிருக்கும் போது விஜய் டிவி சீரியல்கள் மட்டும் பள்ளி, கல்லூரி வாழ்கை என புத்தம் புதிய கதைக்களத்துடன் வெளியாகி குழந்தைகள் முதல் பெரியவர்கள், இளைஞர்கள் வரையுள்ள அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் கவர்ந்தது.
லோக்கல் சேனல் ஆங்கர் டூ சன்டிவி ஹீரோயின் – கண்ணான கண்ணே நிமிஷிகாவின் உண்மை கதை!
அப்படி விஜய் டிவியில் ஒளிபரப்பான பல சீரியல்கள் இன்றளவும் மக்களின் பேவரைட்டாக இருந்து வருகிறது. இதில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் வீட்டு வேலைக்காரி செண்பா முதலாளியின் மகன் கார்த்திக்கை திருமணம் செய்து கொள்ளும் ‘ராஜா ராணி’ சீரியல், படித்த பட்டணத்து இளம்பெண் நந்தினி படிக்காத கிராமத்தை சேர்ந்த சின்னத்தம்பியை திருமணம் செய்யும் ‘சின்னத்தம்பி’ சீரியல் உள்ளிட்ட பல சீரியல்களுக்கு மக்கள் தங்களது பெறாதவரை கொடுத்திருந்தனர்.
இப்படி இருக்க விஜய் டிவி ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ‘சின்னத்தம்பி’ சீரியலை டிவி சேனல் மறுஒளிபரப்பு செய்ய இருப்பதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் 2 முதல் 2019ம் ஆண்டு ஜூன் 21 வரை சுமார் 442 எபிசோடுகளாக ஒளிபரப்பப்பட்ட ‘சின்னத்தம்பி’ சீரியலில் நடிகர் ப்ரஜன் மற்றும் நடிகை பாவனி ரெட்டி ஆகியோர் நடித்திருந்தனர். எதிரும் புதிருமான இருவரும் திருமணம் செய்து கொண்டு, வாழ்க்கையில் சந்திக்கும் போராட்டங்களை தாண்டி எப்படி இணைவார்கள் என்பது தான் இந்த சீரியலின் ஒன் லைன் கதைக்களம் ஆகும்.
பிக்பாஸ் வீட்டில் இருந்து நமீதா வெளியேறியதற்கான காரணம் இது தான் – அபிஷேக் வெளியிட்ட பதிவு!
இப்போது மக்கள் மத்தியில் பேராதரவை பெற்றிருந்த ‘சின்னத்தம்பி’ சீரியல் விஜய் டிவியில் மீண்டுமாக மறுஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் விஜய் டிவி ரசிகர்கள் ‘சின்னத்தம்பி’ சீரியலை இனி விஜய் சூப்பர் சேனலில் கண்டுகளிக்கலாம். இதற்கு மத்தியில் சீரியல் ஒளிபரப்பாகும் தேதி குறித்த அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.