தமிழக அரசு வழங்கும் ஊக்கத்தொகை – கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கான அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றின் போது தடுப்பு பணியில் ஈடுபட்ட மருத்துவ பணியாளர்களுக்கு 196 கோடியே 91 லட்சம் ரூபாயை ஊக்கத்தொகையாக அறிவித்துள்ளது. இது குறித்து அதிகாரபூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது.
ஊக்கத்தொகை:
தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் கொரோனா பெருந்தொற்று தீவிரமெடுத்து பரவி வருகிறது. நோய் பரவல் தடுப்பு பணியாக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும் ஊரடங்கையும் அறிவித்தது. இந்த நிலையிலும் பாதிப்புகள் குறையவில்லை மென்மேலும் அதிகரித்தது. இதனால் நோயாளிகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தது. கொரோனா பரிசோதனைகள் செய்ய, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சுகாதார பணிகளை மேற்கொள்ள ஆள் பற்றாக்குறை நிலவியது.
இந்திய கிறித்துவ திருமண சட்டத்தின் உண்மை வடிப்புகள் – தமிழக அரசின் புதிய அரசாணை வெளியீடு!
இதனால் கொரோனா நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிக்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனை சமாளிக்க அரசு மருத்துவ துறைக்கு தற்காலிக ஊழியர்களை நியமித்தது. மருத்துவர்களுக்கு உதவவும், கொரோனா நோயாளிகளை கவனிக்கவும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் செவிலியர்கள், உதவியாளர்கள், தூய்மை பணியாளர்கள் போன்றோர் தற்காலிக பணிகளுக்காக ஒப்பந்த ஊதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் ஒருநாள் பள்ளிக்கு வந்தால் மறுநாள் விடுமுறை – கல்வித்துறையின் முக்கிய அறிவிப்புகள்!
கொரோனா தடுப்பு பணியில் இவர்களது பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. தற்போது இவர்களுக்கு தமிழக அரசு ஊக்கத்தொகை அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் கொரோனா நோய் தடுப்பு பணியில் ஒப்பந்த அடிப்படையில் ஈடுபட்ட 1,50,168 மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு 196 கோடியே 91 லட்சம் ரூபாயை ஊக்கத்தொகையாக அறிவித்துள்ளது. இது குறித்து அதிகாரபூர்வ அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது.