தமிழகத்தில் ஒருநாள் பள்ளிக்கு வந்தால் மறுநாள் விடுமுறை – கல்வித்துறையின் முக்கிய அறிவிப்புகள்!
தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி முதல் 8ம் வகுப்பு வரையிலானவர்களுக்கு பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள்:
தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் நவம்பர் 1ம் தேதி 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது பள்ளிக் கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி காலையிலிருந்து மாலை வரை வழக்கம் போல் முழு நேரமும் வகுப்புகள் சுழற்சி முறையில் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பிற விவரங்கள் இதோ!
மாணவர்களிடையே சமூக இடைவெளி இருப்பது கட்டாயமானதாகும். மேலும் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் எனது கட்டாயம் அல்ல என்றும் ஆன்லைன் மூலம் படிக்க விரும்பும் மாணவர்கள் தொடர்ந்து ஆன்லைனில் படிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. திங்கள் கிழமை ஒரு வகுப்பிற்கு பாடம் நடத்தப்பட்டால் செவ்வாய் கிழமை அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். தொடர்ந்து மீண்டும் புதன்கிழமை அவர்கள் வரவேண்டும். இதற்கான திட்டத்தை அந்தந்த பள்ளி நிர்வாகங்களே முடிவு செய்து கொள்ளலாம். இதை பின்பற்றி ஒரு வகுப்பிற்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் நேரடி முறையில் பாடங்கள் நடத்தப்படும்.
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 14% அகவிலைப்படி உயர்வு – அரசுக்கு கோரிக்கை!
பள்ளிக்கு மாணவர்கள் பெற்றோர் விருப்பத்தின் அடிப்படையில் அனுப்பலாம். அதுமட்டுமின்றி வழக்கம் போல் சத்துணவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அரசின் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து பள்ளிகளும் முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.