தமிழக இளைஞர்களுக்கான சூப்பர் அறிவிப்பு – மாத உதவித்தொகை பெற விண்ணப்பம்!
தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு அரசு அவர்களின் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்புகளை அடிக்கடி அறிவித்து வருகிறது. இருப்பினும், வேலைவாய்ப்பினை பெறாத இளைஞர்களுக்கு உதவும் வகையில் உதவி தொகையும் அளிக்கப்பட்டு வருகிறது.
உதவித்தொகை:
தமிழக அரசு, மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்கு சிறப்பான வேலைவாய்ப்புகளை உறுதி செய்வதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அரசு துறைகளை தவிர, இளைஞர்கள் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை அடைவதற்காக தனியார் நிறுவனங்களை ஒன்றிணைத்து அரசு சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் அடிக்கடி நடத்தப்படுகிறது. இதேபோல், அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாணவர்கள் கல்வித்தகுதியை பதிவு செய்வதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் பள்ளிகள் மூலமே இதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படுகிறது.
இந்நிலையில், படித்து முடித்து அரசு வேலைவாய்ப்பு அலுவகத்தில் பதிவு செய்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரசு உதவித்தொகை அளித்து வருகிறது. அதன்படி, அனைத்து வகை மாற்றுத்திறனாளி இளைஞர்களும் குறைந்த பட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்திருக்கும் மற்றும் அதற்கும் மேற்பட்ட கல்விதகுதி பெற்ற நிலையில் வேலைவாய்ப்பில்லாமல் இருந்தாலும், மற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு அடைந்தும் பணியில்லாத பட்சத்தில் அவர்களுக்கு அரசு சார்பில் மாத உதவித்தொகை வழங்கப்படுகிறது.
கொட்டப்போகும் கனமழை.. இந்த 16 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம் தகவல்!
Exams Daily Mobile App Download
தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பினை பெறாத இளைஞர்கள் இந்த உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பத்தினை அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் மோகன் அறிவித்துள்ளார். அதன்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த அடையாள அட்டையை கொண்டு நேரடியாக வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் அல்லது https://employmentexchange.tn.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்