கொட்டப்போகும் கனமழை.. இந்த 16 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம் தகவல்!

0
கொட்டப்போகும் கனமழை.. இந்த 16 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம் தகவல்!
கொட்டப்போகும் கனமழை.. இந்த 16 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம் தகவல்!
கொட்டப்போகும் கனமழை.. இந்த 16 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம் தகவல்!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் இன்று (அக்.11) திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை அறிக்கை:

தமிழகத்தில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர்‌, தென்காசி, திருப்பூர்‌, திண்டுக்கல்‌, விருதுநகர்‌, கரூர்‌, ஈரோடு, நாமக்கல்‌, சேலம்‌, திருப்பத்தூர்‌, மதுரை, திருச்‌சிராப்பள்ளி, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும்‌ தேனி ஆகிய மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதனை தொடர்ந்து நாளை திண்டுக்கல்‌, நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, ஈரோடு, தேனி, மதுரை, கடலூர்‌, சிவகங்கை, திருப்பத்தூர்‌, புதுக்கோட்டை, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்‌சி, திருச்‌சிராப்பள்ளி, பெரம்பலூர்‌, அரியலூர்‌, சேலம்‌, நாமக்கல்‌, கரூர்‌, கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர்‌ மற்றும்‌ திருவண்ணாமலை மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் அக்.13ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர்‌,அரியலூர், திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, மதுரை,கரூர்‌, சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம்‌, புதுக்கோட்டை, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌,திருச்சிராப்பள்ளி, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, பெரம்பலூர்‌, திருப்பத்தூர்‌, ஈரோடு, சேலம்‌, நாமக்கல்‌, கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை- அமைச்சர் பொன்முடி விளக்கம்!

Exams Daily Mobile App Download

அடுத்ததாக அக். 14, 15ம் தேதியன்று புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. மேலும் தமிழகத்தில் கரூர்‌, திருப்பத்தூர்‌, நீலகிரி, கோயம்புத்தூர்‌, கிருஷ்ணகிரி, தேனி,நாகப்பட்டினம்‌, நாமக்கல்‌, திருப்பூர்‌, திண்டுக்கல்‌, ஈரோடு, திருச்சிராப்பள்ளி, தர்மபுரி, சேலம்‌, பெரம்பலூர்‌, அரியலூர்‌, கடலூர்‌, புதுக்கோட்டை, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, மயிலாடுதுறை மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேக மூட்டத்துடன்‌ காணப்படும்‌ என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!