தமிழகத்தில் 1 – 9ம் வகுப்பு மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு | மதிப்பெண் பட்டியல் விபரங்கள் வெளியீடு!
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்து 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது. இதனை தொடர்ந்து மே 27ம் தேதிக்குள் மதிப்பெண் பட்டியலை தயாரிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கல்வித்துறை அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பினை கட்டுப்படுத்தும் நோக்கில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் எடுக்கப்பட்டன. பின்னர் நோய்த்தொற்று குறைந்து ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டு பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வழக்கம் போல ஆண்டு இறுதித்தேர்வுகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது.
Exams Daily Mobile App Download
மேலும் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்றுடன் தேர்வுகள் நடந்து முடிந்துள்ளது. எனவே இன்று முதல் கோடை விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இம்மாணவர்க்ளுக்கு தேர்வு முடிவுகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு விடைத்தாள்களை திருத்தி வருகிற மே 27ம் தேதிக்குள் மதிப்பெண் பட்டியலை தயார் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தேர்ச்சி பதிவேடுகளை மே 28ம் தேதி மதியம் 2மணி முதல் மாலை 5 மணி வரையிலான நேரத்தில் அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் குறிப்பிட்ட இடத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – விரைவில் YONO 2.0 சேவை அறிமுகம்!
இதற்கிடையில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மே 30ம் தேதியுடன் முடிவடைகின்றன. 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கி உள்ள நிலையில் ஆசிரியர்கள் மே 20ம் தேதி வரை பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. ஏற்கனவே அறிவித்தபடி அடுத்த கல்வியாண்டு மே 13ம் தேதி தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.