Google நிறுவன ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – சுந்தர் பிச்சை அறிக்கை!
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிந்து வரும் நிலையில், கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே அலுவலகத்திற்கு வர வேண்டும் என அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
கூகுள் நிறுவனம்:
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. இதனை தடுக்க முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதனால் தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுறுத்தப்படுகின்றனர். அதன்படி கடந்த 1.5 ஆண்டுகளாக ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா பரவல் பல இடங்களில் கணிசமாக குறைந்து வரும் நிலையில் பல தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை அலுவலகத்திற்கு வர அனுமதி வழங்கி உள்ளது.
நாளை (ஜூலை 30) மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரிய அறிவிப்பு!
ஆனால் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வரும் போது இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என இன்போசிஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. தற்போது கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன் படி ஊழியர்கள் WFH அக்டோபர் 18 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் ஊழியர்கள் அலுவலகம் வரும் போது கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த முறை அமெரிக்காவில் செயல்பாட்டிற்கு வர உள்ளது. வரும் மாதங்களில் மற்ற நாடுகளுக்கும் இது செயல்படுத்தப்படும். மற்ற நாடுகளில் தடுப்பூசி கையிருப்பின் அடிப்படையில் இந்த முறை அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை காரணமாக ஊழியர்களுக்கு மன அமைதி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.