சன் டிவி “ரோஜா” சீரியலில் வெளிச்சத்துக்கு வரும் உண்மைகள் – வெளியான ப்ரோமோ!!
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா தொடரில் நேற்று பாட்டியை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைக்கின்றனர். இந்நிலையில் இன்று அனு கோமா நிலையில் இருப்பது போல நடிக்கிறார் என்பதை ரோஜா கண்டுபிடிக்கிறார். அது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.
ரோஜா சீரியல் ப்ரோமோ:
சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களில் ரோஜா சீரியல் பலரின் கவனத்தையும் ஈர்த்த சீரியல் ஆகும். இந்த தொடரில் மூத்த நடிகர்கள் பலரும் நடிக்கின்றனர். வடிவுக்கரசி இதில் அர்ஜூனின் பாட்டியாக நடித்து வருகிறார். இந்த சீரியலில் பல்வேறு திருப்பங்கள் நடைபெற்று வருகிறது. அதனால் மக்கள் மனதில் பெரும் வரவேற்பை பெற்று TRPயில் முன்னிலையில் உள்ளது.
இந்தியாவில் 10 வயதிலேயே புகையிலையை கையில் எடுக்கும் சிறுவர்கள் – சர்வே முடிவுகள்!
இந்நிலையில் நேற்று பாட்டி ஜெயிலில் இருந்து காணாமல் போகிறார். அதன் பின்னர் அவரை கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்து வருகின்றனர். வீட்டில் அனு கோமா நிலையில் இருப்பதால் ரோஜாவும், அர்ஜுனும் சேர்ந்து வாழ கூடாது என பாட்டி சொல்கிறார்.
நடிகை மீரா மிதுன் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு – அவதூறு வழக்கு!
இவள் கோமா நிலையில் இருந்தால் நாங்க சேர்ந்து வாழ கூடாதா? என்று அர்ஜுன் சண்டை போடுகிறார். அதன் பின்னர் ரோஜா அனு ரூமில் தனியாக இருக்கின்றனர். அனுவை விட்டு ரோஜா விலகி வர அனு தனது முடியை சரி செய்கிறார். அதை கண்ணாடி மூலமாக ரோஜா பார்த்து விடுகிறார். அனு ஏமாத்துவது தெரிந்து ரோஜா சிரிக்கிறார். இப்படி காட்சிகள் அமைந்த ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. இதனால் அடுத்து வரும் மாற்றங்களை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.