நடிகை மீரா மிதுன் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு – அவதூறு வழக்கு!
தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பட்டியலின மக்களை இழிவாக பேசியதாக துவங்கப்பட்ட வழக்கில், நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், நாளை (ஆகஸ்ட் 12) விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.
மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு:
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவரும், தமிழ் திரையுலக துணை நடிகையுமான மீரா மிதுன் அடிக்கடி எதாவது சர்ச்சைக்குரிய விஷயங்களில் சிக்கி வருவது வழக்கமான செயலாகும். சமூக வலைதளங்களில் இவர் பேசும் கருத்துக்கள் எப்போதுமே சிக்கல்களை உண்டு பண்ணும். அந்த வகையில் தற்போது தமிழகத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்களை அவதூறாக பேசியவாறு அவர் ஒரு காணொளியை பதிவிட்டிருந்தார்.
தமிழகத்தில் ‘நீரஜ்’ என்ற பெயர் இருந்தால் 2 லி பெட்ரோல் இலவசம் – இந்தியன் ஆயில் நிறுவனம்!
வழக்கம் போல இந்த கருத்துக்கள் பிரச்சனையை உருவாக்க, மீரா மிதுன் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில், ‘நடிகை மீரா மிதுன் பட்டியலின சமூகத்தை சேர்ந்த மக்களை இழிவாகவும், தரக்குறைவாகவும் பேசி ஒரு காணொளியை தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிட்ட இனத்தை சேர்ந்த மக்களையும், சமூகத்தையும் கேவலமான, மோசமான வார்த்தைகளில் பேசி இருந்தார்.
அதனால் நடிகை மீது தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், மீரா மிதுன் மீது, இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள், 153- கலகம் செய்ய தூண்டி விடுதல், 153 (ஏ)(1)(ஏ) ன் கீழ் சாதி, மத, இன தொடர்பாக விரோத உணர்ச்சியை தூண்டி விடுதல்.
ராஜேந்திர சோழன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் – முதல்வர் அறிவிப்பு!
505 (1)(பி) ன் கீழ் பொதுமக்களின் அமைதியை குலைக்கும் வகையில் பயமுறுத்துதல், 505 (2) ன் கீழ் மக்களிடையே தவறான தகவலை பரப்பி தீங்கு விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளிலும், மேலும் பட்டியலினத்தவர்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டங்களின் கீழ் 3(1)(ச), 3(1)(ள), (3)(1) (ர) உள்ளிட்ட பிரிவுகள் என மொத்தமாக 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதை தொடர்ந்து நடிகை மீரா மிதுன் நாளை (ஆகஸ்ட் 12) காலை 10 மணியளவில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசில் ஆஜராக வேண்டும் என மத்திய குற்றப்பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.