கயல் சீரியல் கதாநாயகி சைத்ரா வீட்டில் நடந்த விஷேஷம் – குவியும் வாழ்த்துக்கள்!
தமிழ் சின்னத்திரையில் சிறந்த வில்லியாக கால்தடம் பதித்து, தற்போது சன் டிவியில் கயல் சீரியலில் கதாநாயகியாக கலக்கி வரும் நடிகை சைத்ரா ரெட்டி, தனது கணவருடன் 2வது திருமண நாளை இன்று கொண்டாடுகிறார்.
திருமண நாள்:
ஜீ தமிழில் யாரடி நீ மோகினி சீரியலில் இளம் வில்லியாக களமிறங்கி ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சைத்ரா ரெட்டி. ஒரு வில்லிக்கு இவ்வளவு ரசிகர்களாக என ஆச்சர்யப்படும் அளவிற்கு ரசிகர்கள் இருந்தனர். இந்நிலையில் அந்த சீரியல் முடிந்த பின் அவர் சன் டிவியில் தற்போது நம்பர் ஒன் சீரியலாக இருக்கும் கயல் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நடிகர் சஞ்சீவ் நடித்து வருகிறார். டிஆர்பியில் முதலிடத்தை பிடித்து வரும் இந்த சீரியல் மக்களின் மனம் கவர்ந்த சீரியலாக இருக்கிறது.
விஜய் டிவி டாப் சீரியல் நடிகைக்கு விரைவில் திருமணம் – ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!
Exams Daily Mobile App Download
இந்நிலையில் சைத்ரா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஒளிப்பதிவாளராக திரையுலகில் பணிபுரிந்து வருபவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். அந்த வகையில் இன்று அவருக்கு இரண்டாம் ஆண்டு திருமண நாள். திருமணத்திற்கு பின் அதே அழகுடன் நடித்து வரும் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். திருமணம் முடிந்தும் சீரியலில் முன்னணி நடிகையாக இருப்பது என்பது மிகப்பெரிய விஷயம் என்பதால் அதை அழகாக செய்து வரும் சைத்ராவிற்கும் அவருடைய கணவருக்கும் வாழ்த்துக்களை ரசிகர்கள் சமூக வலைத்தளம் மூலமாக தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.