தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 30 நாட்கள் கோடை விடுமுறை!

0
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - 30 நாட்கள் கோடை விடுமுறை!
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - 30 நாட்கள் கோடை விடுமுறை!
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 30 நாட்கள் கோடை விடுமுறை!

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு 30 நாட்கள் கோடை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டு உள்ளார்.

கோடை விடுமுறை:

தமிழ்நாட்டில் தற்போது இரண்டு ஆண்டுகள் கழித்து கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு சென்று வருகின்றனர். மேலும் இந்த ஆண்டு கண்டிப்பான முறையில் பொதுத் தேர்வுகள் நடக்கும் என்று கூறப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து பொதுத் தேர்வுகளுக்கான தேதிகளையும் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அறிவித்தது. மேலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல், மே மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – அரசுக்கு கோரிக்கை!

அதன்படி, தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் ஏப்ரல் 25ம் தேதி தொடங்குகிறது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5ம் தேதி முதல் மே 28ம் தேதி வரை நடைபெறும். மேலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6ஆம் தேதி தொடங்கி 30ம் தேதியும், 11ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மே 9ஆம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடைபெறுகிறது. ஜூன் 23ஆம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும், ஜூன் 17 வெளியிடப்படும். பொதுத்தேர்வுக்கான தேதி அட்டவணை http://tnschools.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அதற்கான கால அட்டவணை ஒன்றை தயாரித்து அதற்கு முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

அடுத்தாக 6 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கான ஆண்டு இறுதித் தேர்வு பட்டியலையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன் தேர்வுகள் மே 5 முதல் 13 ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தேதிகளையும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதாவது, 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மே மாதம் 13 ஆம் தேதி வரை பள்ளிகள் நடத்தப்படும் என்றும், இதனை தொடர்ந்து மே மாதம் 13 ஆம் தேதியில் இருந்து பள்ளிகளுக்கு விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மே மாதம் 13 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 12 ஆம் தேதி வரை சுமார் ஒரு மாதம் கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் விடுமுறையை எண்ணி மகிழ்ச்சியில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!