மே 23 முதல் ஜூன் 24 வரை கோடை விடுமுறை அறிவிப்பு – மாநில அரசின் உத்தரவு!
பீகார் மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கும் மே 23 முதல் ஜூன் 14 வரை கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோடை விடுமுறை:
பீகாரில் உள்ள பள்ளிகளில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகள் மே 23 முதல் ஜூன் 14 வரை மூடப்படும். மே 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், மே 21ம் தேதி வரை மட்டுமே குழந்தைகள் பள்ளிக்கு செல்ல வேண்டும். முன்னதாக மாநிலத்தில் நிலவும் கடும் வெப்பத்தை கருத்தில் கொண்டு, பள்ளி நேரத்தை மாவட்ட நிர்வாகம் குறைத்தது. இதனால் மாநிலத்தின் கடும் வெயிலில் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல வேண்டியநிலை மாறியுள்ளது.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 வரை உயர்வு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
தனியார் பள்ளிகள் தற்போது விடுமுறை அளிக்கவில்லை. கொரோனா காரணமாக பாடத்திட்டம் முடிக்கப்படாததால், பள்ளி நீண்ட காலமாக மூடப்பட்டிருந்தது என்று தனியார் பள்ளி நிர்வாகிகள் கூறுகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பாடத்திட்டத்தை முடித்த பின்னரே விடுமுறை அளித்தால் நன்றாக இருக்கும். வெப்பம் அதிகமாக உள்ளதை யாரும் மறுக்கவில்லை, ஆனால் சரியான நேரத்தில் பாடத்திட்டத்தை முடிக்கவில்லை என்றால், மாணவர்கள் மேலும் கல்வி நிலையில் பின்தங்குவார்கள் என்று தனியார் பள்ளிகள் கூறுகின்றன.
Exams Daily Mobile App Download
இத்தகைய சூழ்நிலையில், அரசு சார்பில் கோடை விடுமுறை தேதி அறிவிக்கப்பட்டாலும் பாடத்திட்டத்தை முடித்த பின்னரே விடுமுறை வழங்கப்படும். பீகாரில் நிலவும் வெப்பத்தை கருத்தில் கொண்டு பள்ளிகளின் நேரம் தொடர்ந்து மாற்றப்பட்டு வருகிறது. பீகாரில் பல மாவட்டங்களில் காலை 10.45 மணி வரை மட்டுமே பள்ளிகள் திறக்கப்படுகின்றன. எனவே தேவை ஏற்பட்டால் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்படலாம் என்று கல்வி அமைச்சர் விஜயகுமார் சவுத்ரி முன்னதாகவே தெரிவித்துள்ளார்.