1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஜூன் 30 வரை பள்ளிகளுக்கான கோடை விடுமுறை நீட்டிப்பு!
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஜூன் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரையும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடர இருக்கிறது.
கோடை விடுமுறை
கடந்த ஒரு சில வாரங்களாக மாநிலத்தில் நிலவும் அதிகபட்ச வெப்பநிலையை கருத்தில் கொண்டு மே 15 முதல் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அளிக்கப்படும் என பஞ்சாப் மாநில அரசு அறிவித்தது. ஆனால், இப்போது பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் மே 15ம் தேதிக்கு பதிலாக ஜூன் 1 முதல் 30 வரை அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறைக்காக மூடப்படும் என்று கல்வி அமைச்சர் குர்மீத் சிங் மீட் ஹேயர் தெரிவித்துள்ளார்.
இனி பணம் எடுக்க, டெபாசிட் செய்ய இது கட்டாயம் – வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
அதாவது, கடந்த ஆண்டுகளை போலவே பள்ளிகளுக்கான கோடை விடுமுறையை வழங்க வேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இப்போது மாநில பள்ளிக் கல்வித் தறை தனது முடிவை மறுபரிசீலனை செய்து ஜூன் 1 முதல் ஜூன் 30 வரை கோடை விடுமுறையை அறிவித்துள்ள நிலையில், அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளிலும் மே 15 முதல் மே 31 வரை ஆஃப்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் மே 15 முதல் மே 31 வரை தொடக்கப் பள்ளிகள் செயல்படும் நேரம் காலை 7 மணி முதல் 11 மணி வரை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் காலை 7 மணி முதல் மதியம் 12:30 மணி வரையும் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஜூன் 30ம் தேதி வரை மாற்றியமைக்கப்பட்டுள்ள கோடை விடுமுறைக்கு பிறகு, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஜூலை 1 முதல் துவங்க இருக்கிறது குறிப்பிடத்தக்கது.