இனி பணம் எடுக்க, டெபாசிட் செய்ய இது கட்டாயம் – வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

0
இனி பணம் எடுக்க, டெபாசிட் செய்ய இது கட்டாயம் - வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
இனி பணம் எடுக்க, டெபாசிட் செய்ய இது கட்டாயம் - வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
இனி பணம் எடுக்க, டெபாசிட் செய்ய இது கட்டாயம் – வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

ஒரு நிதியாண்டில் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் உள்ளிட்ட வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.20 லட்சம் அல்லது அதற்கு மேல் பணம் எடுக்க அல்லது டெபாசிட் செய்ய வேண்டும் என்றால் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட புதிய விதியை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பணப்பரிவர்த்தனைகளுக்கு பான், ஆதார் அவசியம்:

மத்திய அரசு வங்கிக் கணக்கில் பணம் எடுப்பது, பணம் போடுவதற்கான விதிமுறைகளை திருத்தியுள்ளது. இதன்படி, இனி ஒரு நிதியாண்டில் வங்கிக் கணக்கில் 20 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் பணம் எடுத்தாலும், பணம் போட்டாலும், பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அரசிதழில் மத்திய நேரடி வரிகள் வாரியம் மே 10 தேதி வெளியிட்டது.

PM கிசான் திட்டத்தின் கீழ் இணைந்துள்ள விவசாயிகள் கவனத்திற்கு – eKYC செயல்முறையை முடிக்க மே 31 கடைசி நாள்!

இதன்படி, ஒரு நிதியாண்டில் 20 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் பணம் போட்டாலும், எடுத்தாலும் அதற்கு பான் கார்டு அல்லது ஆதார் கார்டு இன்று முதல் கட்டாயமாக காட்ட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும் நடப்புக் கணக்கைத் திறக்கும் போதும் இந்த விதிகள் பொருந்தும். ஒருவர் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் பண பரிவர்த்தனைகளில் ஈடுபடுவதற்கு குறைந்தபட்சம் ஏழு நாட்களுக்கு முன் பான் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய விதிகள்:

  • வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தபால் அலுவலகங்கள் ஆகிய அனைத்திலுமே 20 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் டெபாசிட் செய்யவும் ஆதார் அல்லது பான் கார்டு கட்டாயம் என அரசு தெரிவித்துள்ளது.
  • அதேபோல் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தபால் அலுவலகங்களில் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் எடுப்பதற்கு ஆதார் அல்லது பான் கார்டு கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.
  • வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தபால் அலுவலகங்கள் ஆகியவற்றில் நடப்பு கணக்கு (Current Account) தொடங்கவோ, ரொக்க கடன் கணக்கு (Cash credit account) தொடங்கவோ பான் கார்டு அல்லது ஆதார் கார்டு கட்டாயம்.

மேற்கூறிய விஷயங்களில் பரிவர்த்தனையின் போது பான் கார்டு எண் அல்லது ஆதார் கார்டு எண்ணை குறிப்பிட வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!