பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம் – 7.6 % வட்டி .. முழு விவரம் இதோ!
இந்தியாவில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு உதவும் வகையில் சுகன்யா சம்ரிதி யோஜனா (செல்வ மகள்) திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இத்திட்டம் குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காண்போம்.
சுகன்யா சம்ரித்தி யோஜனா:
இந்திய அஞ்சல் துறை மற்றும் வங்கிகளில் சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது. பெண் குழந்தைகளை பெற்றுள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் பெயரில் இத்திட்டத்தில் சேரலாம். இத்திட்டத்தில் ஆண்டுக்கு 7.6% வட்டி வழங்கப்பட்டு வருகிறது. இரண்டு அல்லது மூன்று பெண் குழந்தைகளை வைத்திருப்பவர்கள் இத்திட்டத்தில் கணக்கு தொடங்கலாம்.
விமானத்தில் ரூ.1126க்கு பயணம் செய்யலாம் – SpiceJet நிறுவனத்தின் சிறப்பு சலுகை! ஜன.29 வரை மட்டுமே!!
Follow our Instagram for more Latest Updates
பெண் குழந்தையின் எதிர்கால நலனுக்கான இத்திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ. 250 செலுத்தி இணையலாம். ஒரு நிதியாண்டில் ரூ.1,50,000 வரையிலும் நீங்கள் டெபாசிட் செய்து கொள்ளலாம். இதில் சேர குழந்தையின் பிறப்பு சான்றிதழ் பெற்றோரின் புகைப்படம், ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் தேவை. இத்திட்டம் நீங்கள் செலுத்தி வரும் முதலீட்டு தொகையை குழந்தைக்கு 18 வயதாகும் போது எடுத்து கொள்ளும் வசதி உண்டு.
அதாவது திருமணத்துக்காகவோ அல்லது உயர்கல்வி செலவுகளுக்காக 50% பணத்தை பெறலாம். எதிர்பாராத விதமாக கணக்கு தொடங்கபட்ட பெண் குழந்தை அல்லது அவரின் பாதுகாவலர்/ பெற்றோர் யாரேனும் இறந்து விட்டால் இடையில் கணக்கை முடித்து கொள்ளும் வசதியும் உண்டு. இத்திட்டத்திற்கு வருமான வரிச்சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் மக்களுக்கு வரி விலக்கு உண்டு.