மத்திய அரசு தேர்தலுக்கு முன் சர்க்கரை, கோதுமை விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. இது குறித்து விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
விலை குறைவு
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மக்களுக்கு நல்ல செய்தி வந்த வண்ணம் இருக்கிறது. அதில் ஒரு பகுதியாக உணவு பொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது. தேர்தலை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக விளக்கம் கிடைத்துள்ளது. அதன் படி அந்தந்த ஒதுக்கீட்டை விட அதிகமாக விற்பனை செய்த கிட்டத்தட்ட 80 சர்க்கரை நிறுவனங்களுக்கு அபராதம் விதித்துள்ளது,
RVNL ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது!
மேலும் அறுவடைக் காலத்தில் கோதுமை நிறுவனங்களின் இருப்பை வெளியிடுமாறு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதே போல அரிசி ற்றுமதியாளர்கள் ஏற்றுமதியை ஊக்கப்படுத்த சரக்குக் கட்டணத்தில் கூட ஏற்றுமதி வரி செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. ஒதுக்கப்பட்ட தொகையை விட அதிகமாக விற்பனை செய்வது சந்தையில் சர்க்கரை விநியோகத்தை அதிகரிக்கிறது. ஆனால் மொத்த விலையை குறைக்கிறது. இதனால் அரசு இந்த நடவடிக்கை எடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.