நாடு முழுவதும் பெட்ரோல், டீசலுக்கு திடீர் தட்டுப்பாடு – மக்கள் அவதி! அரசின் விளக்கம்!
நாடு முழுவதும் பல மாநிலங்களில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பெட்ரோல் விற்பனை அதிகரித்து வருவதை அடுத்து பல மாநிலங்களில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் தட்டுப்பாடு:
நாட்டில் பல மாநிலங்களில் பெட்ரோல் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பொதுமக்கள் தனியார்துறை விற்பனை நிலையங்களை விட பொதுத்துறை நிறுவனங்களின் பெட்ரோல் விற்பனை நிலையங்களான இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் போன்ற இடங்களில் பெட்ரோல் அதிகம் வாங்கி பயன்படுத்துகின்றனர். அதனால் பெட்ரோல் விற்பனை அதிகரித்துள்ளது. அதனால் மாநிலத்தில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா போன்ற மாநிலங்களில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு காரணமாக பல பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டுள்ளன. திறந்திருக்கும் பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் நிரப்ப வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். அதனால் அந்தந்த மாநிலங்களில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு பெட்ரோல் தட்டுப்பாடுகளை ஏற்படாமல் இருக்க நாடு முழுவதும் பெட்ரோல் கையிருப்பில் இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பிறந்த குழந்தைகளுக்கான ஆதார் கார்டு – UIDAIயின் புதிய திட்டம்!
இது குறித்து பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் சில நாட்களாக பெட்ரோல் விற்பனை அதிகரித்துள்ளது. வழக்கமாக இருக்கும் விற்பனையை விட 50 அளவுக்கு கூடுதல் தேவை ஏற்பட்டுள்ளது. மொத்தமாக வாங்குபவர்கள் தங்கள் கொள்முதலை பெட்ரோல் பம்புகளுக்கு மாற்றியது மற்றும் தனியார் விற்பனை நிறுவனங்களில் வாங்குவோர் பொதுத்துறை நிறுவனங்களுக்கு கொள்முதலை மாற்றியது போன்ற காரணங்களால் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் பெட்ரோல் நிலையங்களில் தாமதம், வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் நேரம் அதிகரிப்பு போன்றவை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள், டெப்போக்கள் மற்றும் வினியோக மையங்களில் இருப்புகளை அதிகரித்தல், சில்லறை விற்பனை நிலைய சேவைக்காக டேங்கர் லாரிகளின் கூடுதல் இயக்கம் போன்ற நடவடிக்கைகள் மூலமாக இந்த நிலவரத்தை சரி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்திலும் தேனி, பெரியகுளம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட இடங்களில் தட்டுப்பாடுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில காலமாக பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு பெட்ரோல் கொடுத்த பின் தொகை குறிப்பிட்ட காலத்தில் வசூலிக்கப்படும். ஆனால் தற்போது முன்பணம் செலுத்தும் விற்பனை நிலையங்களுக்கு மட்டுமே பெட்ரோல் விநியோகம் செய்யப்படுகின்றனர். அதுவே தட்டுப்பாட்டிற்கு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளன.