இந்தியாவில் பிறந்த குழந்தைகளுக்கான ஆதார் கார்டு – UIDAIயின் புதிய திட்டம்!
UIDAI எனப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது, ஆதார் அட்டைக்கான விண்ணப்ப செயல்முறையில் சில முக்கிய மாற்றங்களை அறிமுகம் செய்துள்ளது. அதாவது பிறப்பு, இறப்பு தரவுகளை இணைக்க UIDAI திட்டமிட்டுள்ளதால், புதியதாக பிறந்த குழந்தைகளுக்கும் தற்காலிகமாக ஆதார் கார்டினை பெற்றுக் கொள்ளும் வசதி கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய திட்டம்:
இந்தியாவின் தனித்துவமான அடையாள ஆணையம்(UIDAI),ஆதார் தவறாகப் பயன்படுத்துவதையும், புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு நன்மைகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்ட இரண்டு புதிய திட்டங்களைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. அதன்படி,புதிதாக பிறந்த குழந்தைகளுக்கும் இனி தற்காலிக ஆதார் எண்ணைப் பெற்றுக்கொள்ளும் வசதி கொண்டு வரப்படவுள்ளது. எனவும்,பிறப்பு,இறப்பு தரவுகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
Exams Daily Mobile App Download
அந்த வகையில், பிறக்கும்போதே ஒரு யுஐடிஏஐ எண்ணை ஒதுக்கீடு செய்வது குழந்தைகள் மற்றும் குடும்பங்கள்,மத்திய அரசின் திட்டங்களின் பயன்களை பெறுவதை உறுதி செய்யும் என்றும்,பிறப்பு, இறப்பு பதிவு தரவுத்தளங்களுடனும்,பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளுடனும் ஆதார் எண்களை ஒருங்கிணைப்பது அரசின் நேரடி பலன்களை பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும், அரசின் பல சலுகைகளை இறந்தவர்கள் பெயரில் மோசடி செய்து அதன் பலனை மற்றவர்கள் பெறுவதை தடுக்கும் என UIDAI தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு விரைவில் பழைய பென்ஷன் திட்டம்? ஜாக்பாட் அறிவிப்பு!
இது தொடர்பாக UIDAI மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது, “குழந்தை பிறந்த உடன் ஆதார் கார்டினை பெற்றுக் கொள்ளலாம் என்றாலும், குழந்தைகளுக்கான பயோமெட்ரிக் குறைந்தது ஐந்து வயதாக இருக்கும்போது எடுக்கப்படுகிறது. அதன் பின்னர்,எங்கள் குழுக்கள் குழந்தைகளின் குடும்பங்களை பார்வையிடும் மற்றும் அவற்றின் பயோமெட்ரிக் பதிவு செய்வதற்கான நடைமுறைகளை முடிக்கப்பட்டு, அக்குழந்தைகளுக்கான நிரந்தர ஆதார் எண்ணை ஒதுக்கப்படும். மேலும்,ஒரு குழந்தை 18 வயதாகிவிட்டால் பயோமெட்ரிக் மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது” என்று கூறியுள்ளார்.