தமிழகத்தில் ஜன.16 முதல் முழு ஊரடங்கு அமல்? அமைச்சர் திடீர் விளக்கம்!
தமிழகத்தில் தற்போது கொரோனா பெருந்தொற்று வெகு வேகமாக பரவி வருகிறது. அதனால் தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது.
முழு ஊரடங்கு?
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக ஓமைக்ரான் தொற்றை தொடர்ந்து கொரோனா தொற்று வேகமெடுத்தது பரவி வருகிறது. அதனால் தமிழகம் மட்டுமல்ல நாடு முழுவதும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் தினசரி நாட்களில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வரும் ஜன.31ம் தேதி வரை விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லை மாற்றம், உண்மையை சொன்ன அபிநயா – ரசிகர்கள் ஷாக்!
மேலும் கடைகள், திரையரங்குகள், உணவகங்கள் உள்ளிட்டவைகளில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் பேருந்துகளில் 75% பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகை முன்னிட்டு வழிபாட்டு தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்னும் சில தினங்களில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதனால் பொங்கல் பண்டிகை கொண்டாட தடை விதிக்கப்படுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவியது.
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – பொங்கல் பரிசு கோரிக்கை!
அவர்களது அச்சத்தை போக்கும் வகையில் தமிழக அரசு பாதுகாப்புடன் பொங்கல் பண்டிகை கொண்டாட அனுமதி வழங்கியுள்ளது. தமிழக அரசின் இத்தகைய அறிவிப்பு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்தாலும், பொங்கலுக்கு பிறகு ஜன.16ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற தகவல் மக்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் மட்டுமே போதுமானது என்றும், இப்போதைக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.