அரசு வழங்கும் சிலிண்டருக்கான மானியத் தொகை – தெரிந்து கொள்ள எளிய வழிமுறை!
சமையல் எரிவாயுக்களுக்கு அரசு தரும் மானியம் உங்கள் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதா என்பதை ஆன்லைன் மூலம் சில எளிய வழிமுறைகளை பின்பற்றி தெரிந்து கொள்ளலாம். இது தொடர்பான முழு விவரங்களும் இப்பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.
மானியத் தொகை
பொது மக்கள் பயன்படுத்தும் சமையல் எரிவாயுவுக்கு அரசு மானியத் தொகை வழங்கி வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு முறையும் மக்கள் பயன்படுத்தும் சிலிண்டர்களுக்கு அரசு வழங்கும் மானியத் தொகை கொடுக்கப்படுகிறதா, இல்லையா என்பது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தலாம். அதனால் மானியம் பெரும் பயனர்கள் அந்த தொகை உங்களது கணக்கில் செலுத்தப்பட்டு விட்டதா என்பதை அறிந்து கொள்ள சில எளிய வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் 3.8 கோடி வேலைவாய்ப்புகள் – 29% அதிகரிப்பு! மத்திய பணியாளர் அமைச்சர் தகவல்!
இந்த விவரங்களை வாடிக்கையாளர்கள் அவரவர் வீடுகளில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாகவே மேற்கொள்ள முடியும். இதற்காக நீங்கள் செலவிடும் நேரமும் குறைவு தான். அந்த வகையில் சமையல் எரிவாயு பயன்படுத்தும் நபர்கள் மானியத் தொகை குறித்து தெரிந்துகொள்ள முதலில்,
- Mylpg.in என்ற இணையதளத்துக்கு செல்லவும்.
- அங்கு இருக்கும் முகப்பு பக்கத்தில் இண்டேன், பாரத் கேஸ், HP கேஸ் ஆகிய மூன்று சிலிண்டர் நிறுவனங்களின் புகைப்படம் கொடுக்கப்பட்டிருக்கும்.
- அதில் நீங்கள் உபயோகிக்கும் சிலிண்டர் நிறுவனத்தை தேர்வு செய்யவும்.
- இப்போது ஒரு புதிய பக்கம் திறக்கும்.
- அதில் இருக்கும் பார் மெனுவுக்கு சென்று Give your feedback online என்பதை கிளிக் செய்யவும்.
தமிழகத்தில் அக்.1 முதல் இன்ஜினியரிங் கவுன்சிலிங் விருப்ப பதிவு – முக்கிய அறிவிப்பு!
- தொடர்ந்து மொபைல் எண், கஸ்டமர் ஐடி, மாநிலத்தின் பெயர், ஏஜென்சி போன்ற விவரங்களை நிரப்ப வேண்டும்.
- இறுதியாக Feedback Type என்பதைக் கிளிக் செய்யவும்.
- பின்னர் Complaint விருப்பத்தை தேர்வு செய்து ‘Next’ கொடுக்க வேண்டும்.
- பிறகு மீண்டுமாக ஒரு புதிய பக்கம் திறக்கும்.
- அதில் மானியத் தொகை வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ளலாம்.
- ஒருவேளை மானியத் தொகை உங்கள் கணக்கில் செலுத்தப்படாவிட்டால் 18002333555 என்ற இலவச எண்ணை அழைத்து புகார் அளிக்கலாம்.