ரூபாய் நோட்டுகளில் சுபாஷ் சந்திர போஸ் படம் இடம்பெறுமா? மத்திய அரசு விளக்கம்!
ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி படத்திற்கு பதிலாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படம் இடம்பெற வேண்டும் என ரமேஷ் என்பவர் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு பதில் அளித்த மத்திய அரசு, மகாத்மா காந்தி படம் மட்டும் இடம்பெறும் என கூறியுள்ளது.
ரூபாய் நோட்டுகளில் படம்:
பொருட்களை வாங்குவதிலும் விற்பதிலும் ரூபாய் நோட்டுகள் முக்கிய பங்காற்றி வருகின்றன. தற்போது ஆங்காங்கே தலைவர்களின் பெயர்களில் ரயில், விமான நிலையம் போன்றவற்றின் பெயர்களை மாற்றி அமைக்கும் படி கோரிக்கைகளை முன்வைத்து வரும் வேலையில் ரூபாய் நோட்டுகளில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் புகைப்படம் இடம் பெற வேண்டும் என மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
பொறியியல் இறுதியாண்டு மாணவர்கள் கவனத்திற்கு – அண்ணா பல்கலை முக்கிய அறிவிப்பு!
தற்போது அது குறித்த விசாரணை முடிந்த நிலையில் ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி அவர்களின் புகைப்படம் மட்டுமே இருக்கும் என்றும் வேறு தலைவர்களின் புகைப்படங்கள் இடம் பெறாது என்று தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. மேலும் வேறு தலைவர்களின் புகைப்படங்கள் இடம்பெறுவதால் மத சாயம் பூசப்படும் எனவும் மதச்சார்பற்ற இந்திய நாட்டில் இதற்கு இடம் இல்லை என்றும் மத்திய அரசு சார்பில் திட்டவட்டமாக விளக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இது போன்ற கோரிக்கைகள் தொடர்ந்து முன்வைக்கப்படும் நிலையில் இது குறித்து 2010 ஆண்டு தனிக்குழு அமைக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டது. ரூபாய் நோட்டுகளில் வேறு தலைவர்களின் படங்களை பதிவு செய்வது குறித்து பரிசீலனை குழு கூறியதாவது, மகாத்மா காந்தி படத்தை தவிர வேறு படத்தை பதிவு செய்ய இயலாது என குழுவினர் பரிந்துரைத்தது எனவும், மத்திய அரசு தெரிவித்ததை அடுத்து மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதன் மூலம் ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி அவர்களின் புகைப்படம் மட்டும் இடம்பெறும் என திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது.