10,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்கு கூடுதல் அவகாசம் தேவை – மாணவர்கள் கோரிக்கை!!!

0
10,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்கு கூடுதல் அவகாசம் தேவை - மாணவர்கள் கோரிக்கை!!!
10,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்கு கூடுதல் அவகாசம் தேவை - மாணவர்கள் கோரிக்கை!!!
10,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்கு கூடுதல் அவகாசம் தேவை – மாணவர்கள் கோரிக்கை!!!

மத்திய அரசு சார்பாக நடத்தப்படும் CBSE 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்து வருகிற டிசம்பர் 31-ஆம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியிடப்போவதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார். இந்நிலையில் மாணவர்கள் சிலர் பொதுத்தேர்வு குறித்து சமூக வலைத்தளங்களில் சில கோரிக்கைகளை தெரிவித்து வருகின்றனர்.

10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள்:

கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு 9 மாதங்கள் முடிவடைந்தன. கடந்த கல்வியாண்டில் கொரோனா தாக்கம் காரணமாக பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இந்த கல்வியாண்டு தொடங்கி 6 மாத காலம் முடிவடைந்த நிலையில் பொதுத்தேர்வு எப்போது நடக்கும் என்பது குறித்து மாணவர்களின் மத்தியில் குழப்பம் நிலவி வந்தது. இந்நிலையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பெக்ரியால் மாணவர்களின் குழப்பங்களை தீர்க்க சில அறிவிப்புகளை வெளியிட்டார்.

புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் காலிப்பணியிடங்கள் – அரசு பணியாளர்கள் கோரிக்கை!!!

இதன்படி, மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பாடங்கள் குறைப்பு மற்றும் மாணவர்களின் மனநிலை குறித்து இலவச ஆலோசனை எண் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டார். மேலும் சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் கட்டாயம் தேர்வு தாள்களில் நேரடியாக மட்டுமே நடைபெறும் எனத் தெரிவித்தார். தேர்வுகள் நடக்க கால தாமதம் ஏற்படலாம் தவிர கட்டாயம் தேர்வுகள் நடத்தப்படும் தெரிவித்தார். மேலும் வருகிற டிசம்பர் 31-ஆம் தேதி பொது தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப் போவதாக தெரிவித்தார்.

நீதிமன்ற வழக்குகளுக்கு உடனடி நடவடிக்கை- பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு!!

மத்திய கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்பு குறித்து சில கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் மாணவர்கள் தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு மாணவர் ’’ஏப்ரல் மாதம் வரை பொதுத் தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டும்’’ என்றும், மேலும் ஒருவர், ’’தேர்வுக்குத் தயாராக போதிய கால அவகாசம் தேவை என்பதால் மே – ஜூன் மாதங்களில் தேர்வை நடத்தலாம்’’ என்றும், மேலும் ஒருவர் ’’பாடத்திட்டம் இன்னும் முழுமையாக முடிக்கப்படவில்லை என்பதால், மார்ச் வரை மட்டுமாவது தேர்வுகளைத் தள்ளி வையுங்கள்’’ என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!