தமிழகத்தில் இந்த மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம் – அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்!

0
தமிழகத்தில் இந்த மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம் - அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்!
தமிழகத்தில் இந்த மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம் - அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்!
தமிழகத்தில் இந்த மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம் – அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்!

தமிழகத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக இன்ஃபுளூன்ஸா வைரஸ் காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் குழந்தைகளை அதிகம் தாக்கும் என்பதால், இந்த அறிகுறிகள் இருந்தால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

காய்ச்சல் அறிகுறி:

தமிழகத்தில் 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஏகப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டது. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி முகாம்கள் வார இறுதி நாட்களில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த சில வாரங்களாக இன்ஃபுளூன்ஸா வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சலால் அதிகமாக குழந்தைகள் தான் பாதிக்கப்படுகின்றனர்.

புதுச்சேரியிலும் காய்ச்சலால் அதிக குழந்தைகள் பாதிக்கப்பட்டதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தமிழகத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை விட வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் கூறுகையில், இன்று ஒரே நாளில் மாநிலம் முழுவதும் மொத்தம் 1,166 பேர் இன்ஃபுளூயன்ஸா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது பருவநிலை மாற்றத்தால் வரும் என்பதால் அச்சப்பட தேவை இல்லை என தெரிவித்தார்.

தமிழகத்தில் களைகட்டும் தசரா பண்டிகை – 4 நாட்களுக்கு சிறப்பு பேருந்து! மகிழ்ச்சியில் மக்கள்!

Exams Daily Mobile App Download

மேலும் நாளை (செப் 21) மொத்தம் 1,000 இடங்களில் காய்ச்சல் பரிசோதனை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட இருப்பதாக அவர் தெரிவித்தார்.இந்த முகாமில் சளி, காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் சென்று மருத்துவர்களின் உரிய ஆலோசனைகளை பெறலாம் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் நடமாடும் மருத்துவ முகாம்கள் நாளை செயல்பட இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் எனவும், இது குறித்து பள்ளிகளுக்கு அறிவுரை வழங்கி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் முகாம்கள் நடைபெறும் நிலையில் சென்னையில் மட்டும் 100 இடங்களில் முகாம்கள் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!