தலிபான்களின் கட்டுப்பாட்டில் போராளிகளின் கோட்டை பஞ்ஷிர்? தளபதி பேட்டி!
ஆப்கானிஸ்தான் முழுவதுமாக தலிபான்களின் பிடியில் சிக்கியுள்ளது. போராளிகளின் கோட்டை எனப்படும் பஞ்ஷிர் பகுதியை தற்போது தலிபான்கள் கைப்பற்றியுள்ளதாக தலிபான் தளபதி கூறியுள்ளார்.
பஞ்ஷிர்:
ஆப்கானிஸ்தான் அரசை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதனால் அந்நாட்டு அரசியலில் பதற்றம் நிலவி உள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறிய பின் அங்கிருக்கும் பெரும்பாலான மாகாணங்களை தலிபான் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து அதிபர் அமீரகத்துக்கு தப்பி ஓடியது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் இதனால் பதற்றமான சூழ்நிலை உருவாகியது.
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை!
தலைநகர் காபூலும் தாலிபான்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்ததை தொடர்ந்து பொதுமக்கள் அச்சத்தில் நாட்டை விட்டு வெளியேறினார். பலர் விமானங்களின் டயர்களில் பயணித்தும் கூட நெரிசலில் இருந்தது குறிப்பிடத்தக்கது. பஞ்ச்ஷிர் மாகாண மக்கள் தலிபான்கள் ஆட்சியை ஏற்க மறுத்து வருகின்றனர். இதனால் ஏற்பட்ட தீவிர சண்டையின் காரணமாக குந்தூஸ், பாக்லன், கபிஸா, பர்வான், தக்கார் ஆகிய பகுதியில் வாழ்ந்த மக்கள் கூட்டமாக வெளியேறி வருகின்றனர்.
பஞ்ஷிர் என்னும் பகுதி போராளிகளின் கோட்டை என அழைக்கப்படுகிறது. 1990களில் தலிபான்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தபோது பஞ்ஷிரை அவர்களால் நெருங்க முடியவில்லை. ஆப்கன் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலே நீண்ட காலமாக தலிபான்களை எதிர்த்து வருகிறார். தற்போது பஞ்ஷிர் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ராய்ட்டர் என்னும் செய்தி நிறுவனம் இதனை வெளியிட்டுள்ளது.
BSNL பயனர்களுக்கு ஷாக் நியூஸ் – குறைந்த விலை ரீசார்ஜ் பிளான் நீக்கம்!
இதனை தொடர்ந்து, ”அல்லாஹ்வின் கருணையால் முழு ஆப்கனும் தலிபான்கள் வசம் வந்துள்ளன. பஞ்ஷிர் பள்ளத்தாக்கில் தொந்தரவு கொடுத்து வந்த கூட்டம் விரட்டப்பட்டது. முழு ஆப்கனும் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது” என தலிபான் தளபதி பேட்டி அளித்துள்ளார். மேலும் துணை அதிபர் அம்ருல்லா சலேவும் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இருப்பினும் போதிய ஆதாரம் கிடைக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.