இன்று முதல் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் – சேவைகள் பாதிக்கும் அபாயம்!
இந்திய அளவில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று தொடங்கிவுள்ளது. வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து இப்போராட்டம் நடத்தப்படுவதாக அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்:
நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து அனைத்து அரசு ஊழியர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்த போராட்டம் வங்கி ஊழியர் சங்கம் திட்டமிட்டபடி இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இப்போராட்டத்தில் வங்கி ஊழியர்கள் 10 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். இன்று நடைபெற இருக்கும் போராட்டத்தினால் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் என்ற அபாயம் ஏற்பட்டுள்ளது.
TNUSRB காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு – சமூக வலைதளம் ஆய்வு!
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் சட்ட திட்டத்தில் இரண்டு வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த புதிய முயற்சிக்கு வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தரப்பில் பெரும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தாக்கல் செய்யப்பட்ட சட்டத்திட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று இன்றும், நாளையும் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் 90,000 ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்துள்ளனர்.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – பூர்வாங்க பணிகள் துவக்கம்!
பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு கொடுக்கும் மத்திய அரசின் திட்டத்தில், அரசு வங்கியில் வேலை பார்க்கும் அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் விருப்பம் இல்லை என்று முன்பே தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் போராட்டம் தொடங்கவிருப்பதால் பணியில் உள்ள அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. தற்போது ஆட்சியில் உள்ள தி.மு.க இந்த போராட்டத்திற்கு முழு ஆதரவினை தெரிவித்துள்ளது.