ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – பூர்வாங்க பணிகள் துவக்கம்!

0
ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 - பூர்வாங்க பணிகள் துவக்கம்!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 - பூர்வாங்க பணிகள் துவக்கம்!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – பூர்வாங்க பணிகள் துவக்கம்!

தமிழகத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட பொங்கல் பரிசு வழங்கப்படும். இதேபோல் புதுச்சேரியிலும் வழங்கப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. மேலும் இதற்கான பூர்வாங்க பணிகளை தற்போது துவக்கி உள்ளது.

பொங்கல் பரிசு:

தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசு பொருட்களை அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கி வருகிறது. அத்துடன் இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசு வழங்க ரூ.1,088.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் பச்சரிசி உள்ளிட்ட 20 பொருட்கள் வழங்கப்படும். தற்போது புதுச்சேரி அரசும் பொங்கல் பரிசு பொருட்களை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது. இதற்கு முன் தீபாவளிக்கும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை வழங்க புதுச்சேரி அரசு திட்டமிட்டது.

TNPSC குரூப் 4 VAO தேர்வெழுத திட்டமிடுவோர் கவனத்திற்கு – A டூ Z தகவல்கள் இதோ!

ஆனால் இதற்கான டெண்டர் இறுதி செய்ய காலதாமதம் ஏற்பட்டது. இதனால் தற்போது தான் ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் அனுப்பப்பட்டது. அதனால் இன்றும் பல தொகுதிகளில் தீபாவளி பரிசு வழங்கப்படாமல் உள்ளது. அதனால் தற்போது விரைவாக பூர்வாக பணிகளை தொடங்கி 3.65 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்க திட்டமிட்டுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு சிவப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி 1 கிலோ, வெல்லம் அரை கிலோ, பாசிப்பருப்பு அரை கிலோ, முழு முந்திரி பருப்பு 25 கிராம், ஏலக்காய் 10 கிராம் போன்ற பொருட்கள் பொங்கல் பரிசாக வழங்க திட்டமிட்டு இருந்தது.

தமிழகத்தில் ஜன.3 முதல் பள்ளிகள் திறப்பில் மாற்றம் – சுழற்சி முறை வகுப்புகள் ரத்து! அரசாணை வெளியீடு!

ஆனால் மத்திய அரசால் பொருளாக வழங்க இயலாததால் இதற்கு ஈடாக ரூ.200 சிவப்பு குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. நடப்பாண்டில் இது குறித்து அறிக்கை இன்னும் வெளிவரவில்லை. அத்துடன் கதர் மற்றும் கிராம தொழில் வாரியம் சார்பில் விற்பனை அரங்குகளில் பொங்கல் பொருட்கள் குறைந்த விலையில் விற்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் பச்சரிசி 1 கிலோ, வெல்லம் 1 கிலோ, பச்சபருப்பு அரை கிலோ, நெய் 100 கிராம், ஏலக்காய், முந்திரி, திராட்சை சேர்த்து 50 கிராம் என்ற பரிசு தொகுப்பினை விற்க திட்டமிட்டுள்ளது. இதற்கான சப்ளை செய்யும் நிறுவனத்தை வருகிற டிசம்பர் 24ம் தேதி உறுதி செய்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!