TNUSRB காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு – சமூக வலைதளம் ஆய்வு!
தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட தேர்வர்களுக்கு தற்போது சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் காவல் விசாரணை நடைபெற்று வருகிறது. அதில் சமூக வலைத்தளத்திலும் ஆய்வு மேற்கொள்ளும் முறை பின்பற்றப்பட்டு வருகிறது.
காவல் விசாரணை:
தமிழகத்தில் கடந்த 2020ம் ஆண்டு TNUSRB தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்ட 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இரண்டாம் நிலை காவலர் பணிக்கு எழுத்துத் தேர்வு கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. அதற்கான தேர்வு முடிவுகள் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. பின்னர் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்திறன் தேர்வுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் முடிவடைந்தது. அதனை தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதம் முழுமையாக முடிவடைந்தது.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – பூர்வாங்க பணிகள் துவக்கம்!
இந்நிலையில் அதற்கான தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 26ம் தேதி TNUSRB தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது. அந்த வகையில் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் காவல் விசாரணை டிசம்பர் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது தமிழகத்தில் மாவட்ட வாரியாக சில பகுதிகளில் மருத்துவ பரிசோதனையும், காவல் விசாரணையும் நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடத்தப்படும் காவல் விசாரணையில் தேர்வு செய்யப்பட்டவர்களின் சான்றிதழின் உண்மைத்தன்மை அறியப்படுகிறது.
TNPSC குரூப் 4 VAO தேர்வெழுத திட்டமிடுவோர் கவனத்திற்கு – A டூ Z தகவல்கள் இதோ!
அவரது பகுதிக்கு உட்பட்ட நபர்களிடம் தேர்ச்சி பெற்றவரின் ஒழுக்கம் சார்ந்த விசாரணை நடைபெற்று வருகிறது. அதாவது தேர்வு பெற்றவர்கள் பெயர், இருப்பிடம், ஜாதி, குற்றப்பின்னணி உள்ளிட்ட ஒழுக்க நடவடிக்கை குறித்து உளவுப்பிரிவு போலீசார் விசாரித்து அறிக்கை அனுப்புவது இதுவரையில் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது கூடுதலாக சமூக வலைத்தளங்களில் தேர்வு செய்யப்பட்டவரின் ஈடுபாடு மற்றும் இதர நடவடிக்கை குறித்து உளவுத்துறை மற்றும் குற்றப்பிரிவு துறை மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.